Thursday, April 8, 2010

என்ன செய்வேன் ?

நீ போகாத இடத்திற்கு
மிக அவசரமாய்ப் போகிறேன்
பிறகு பேசுகிறேன் என்றாய்
ஒரு நாள்

இல்லாத வேலையின்
பெயரை சொல்லி
சில அவசர வார்த்தைகளோடு
தொலைபேசியை அணைத்தாய்
மறுநாள்

நான் அனுப்பிய
குறுந்செய்தியின் பதிலுக்காக
காரணமின்றி என்னை
காத்திருக்க வைத்தாய்
வேறு ஒரு நாள்

என்னுடனான உன்
கடித தொடர்பையும்
காரணமின்றி
துண்டித்துவிட்டாய்
இன்னும் ஒரு நாள்

உன்னால் வேண்டாமென்று
வீசி எறியபட்ட
கண்ணாடியாய் இப்போது
உடைந்து சிதறி போய் விட்டேன்

இப்படி நீ என்னை
தவிர்த்தும் கூட

இதை அனைத்தையும் அறியாது
உன் பெயர் சொல்லி துடிக்கும்

என் இதயத்தை
என்ன செய்வேன் ?

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?