Thursday, April 8, 2010

இப்போதும் நான் அழவில்லை.......

அன்று
நான் தோற்றுப்போய்
துவண்டிருந்த பொழுது
கண்கள் கலங்க என்னிடம்
சொன்னாய்

இனி உன் கண்கள் அழவேண்டாம்
உனக்காக எப்போதும் அழும்
என் கண்கள் என்று

இன்று
என் பார்வை கூட
உன்னிடம் பட வேண்டாம் என்கிறாய்

இப்போதும் நான் அழவில்லை
உன் கண்கள் உடனில்லை என்பதால்..!!!!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?