Thursday, April 8, 2010

உன்னை மட்டுமே தேடுகிறேன்..!!!

தினமும் என் மனதில் நீ
புதிதாய் பிறக்கிறாய்
உன் நினைவை என்னில்
நிலைக்க வைக்கிறாய்

என் எண்ணங்கள் அனைத்தையும்
உனக்காக என மாற்றிவிட்டு
என் உயிராக உன்னை
உருமாற்றி செல்கிறாய்

என் உயிரில் என்றும்
உன் உருவமே

என் உணர்வில் என்றும்
உன் நினைவே

என் உச்சரிப்பில் என்றும்
உன் குரலே

என் விழிகளில் என்றும்
உன் முகமே

என் மூச்சில் என்றும்
உன் சுவாசமே

ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்
என் உயிர் தேடும்
ஒரே உறவாக
உன்னை மட்டுமே காண்கிறேன்

நான் என்றும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்

உன்னை நினைபதற்க்காக மட்டுமே
நான் இன்றும் இருக்கிறேன்

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?