Wednesday, March 31, 2010

நிலைக்கட்டும் இன்னும் சில நிமிடங்கள்....

விக்கல் எடுக்கின்றது...!
தண்ணீர் குடிக்க மறுக்கிறேன்...!
ஏனென்றால் நினைப்பது நீ என்றால்
நிலைக்கட்டும் இன்னும் சில நிமிடங்கள்.....

உன்னை நான் விரும்பியிருந்தேன்

உன்னை நான் விரும்பியிருந்தேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாமல் - இன்று
உன்னால் நான் பிரிகிறேன்

உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்

உடலில் உயிர் உள்ளவரை
உன்னை நான் மறவேன்
உனக்காக என்றும் வேண்டி
உள்ளதில் நிதம் தொழுவேன்

என் வாழ்வின் நியங்கள்.

மறக்கவே முடியவில்லை
உன்னையும் நம் காதல்
நினைவுகளையும் மறந்துவிட
அது என்ன நினைவுகளா? இல்லை..
என் வாழ்வின் நியங்கள்.

நீ விரும்பும் இதயம்

நீ விரும்பும் இதயம்
ஒரு நாள் உன்னை
தவிக்கவிட்டு செல்லும்
போது நினைத்துக்கொள்....
உன்னை விரும்பிய ஒரு
இதயத்தை நீ "என்றோ"
தவிக்க விட்டு இருக்கிறாய் என்று...........

என் வாழ்க்கைதுணை என்று

என் விழியோரம் ஒரு நிழல்
என்கேயோ பார்த்த ஞாபகம்..
என் செவியோரம் ஒரு குரல்
எப்போதோ கேட்ட ஞாபகம்..
என் இதழோரம் ஒரு சுவை
எதையோ சுவைத்த ஞாபகம்..
என் மனதோரம் ஒரு சாரல்
எப்படியோ நனைந்த ஞாபகம்.. ஓ.!
இப்போதுதான் புரிகின்றது!!
முற்பிறவியில்(லும்) நீதான்
என் வாழ்க்கைதுணை என்று

நீ இல்லததால்....

அன்று கண்ணீர் கூட சுகமானது,
துடைக்க நீ இருந்ததால்,
இன்று சிரிப்பு கூட வேதனையானது,
சேர்ந்து சிரிக்க நீ இல்லததால்

நீ கரைந்து விட மாட்டாயா?

உனது கண்கள் கலங்கிய பின்பு தான்...
எனது கண்களில் தூசி விழுந்து
இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன்.....
என்ன ஆனாலும் கண்கலங்கேன்....
கண்களுக்குள் இருக்கும் நீ கரைந்து விட மாட்டாயா?

ஒப்பிட முடியவில்லை

உயிருடன் கூட ஒப்பிட முடியவில்லை
உன்னை”ஏன், என்றால்“
உயிரும் ஒரு நாள் பிரிந்துவிடும் என்பதால்”

கேட்பது நியாயமா?...

என் முகவரி நீ என்று நான் சொன்னால்,...
நிரந்தர முகவரியா, தற்காலிக முகவரியா
என்று கேட்பது நியாயமா?...

கண்ணீரை வர வைக்கிறாய்.!!

உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை,
என் இதயத்தில் வைத்து இருகிறேன்.
ஆனால் நீயோ, இதயத்தில் இருந்து கொண்டு
கண்களில் கண்ணீரை வர வைக்கிறாய்.!!

கலைந்து போன காதால்

கலைந்து போன காதால்
தோற்றுப்போன காளையவன்
கையிலுள்ள தீபந்தம்

நான் பிடித்துக்கொள்ள முன்
நீயே பற்றவைத்துவிட்டாய்

உன்னால் தோல்வியுற்ற எனக்கு
நீ தந்த நெருப்பு பரிசு........

உன்னை மறப்பதற்காக
தீ மூட்டிக்கொள்கிறேன்
ஆனால்
நெருப்பாய் உன் ஞாபகங்கள்
கூட்டிக்கொள்கிறது

உனக்கு தெரியுமா
என் சுவாசப் பாதைகளை
அடைத்துக்கொள்வது "சிகரட்" புகையல்ல
உன்னோடிருந்த "சீக்கிரட்" நிமிடங்களே ......

பிரேமம் தானடி....

உன்னோடு நடைபயில,
உன் தோளில் தலைசாய,
உன் தலையை கோதி விட
என்று என்னுள் எத்தனையோ
ஆயிரம் ஆசைகள்...
அத்தனைக்கும் காரணம்
உன்னில் நான் வைத்திருக்கும்
பிரேமம் தானடி....

கலக்கமாய் இருக்கின்றது....

உன் மீதான காதலே
அளவுக்காதிகமாய் கோபமாய் வருகின்றது...
ஆனால், அந்தக் கோபமே உன்னிடம்
இருந்து என்னைப் பிரித்துவிடுமோ என்று
கலக்கமாய் இருக்கின்றது....

மௌன அஞ்சலி

மௌன அஞ்சலி செலுத்த நீ
என் கல்லறைக்கு வந்தாய் உனக்கு தெரியாது..
நான் கல்லறைக்குள் இருப்பதற்கு
காரணமே உன் மௌனம் தான் என்று....!

ஒரு தொலைவில்

நீ எனக்கு மட்டும் என்று
உரிமை கொண்டாடிய சந்தோஷம்
நீ என்னில் அக்கறை காட்டிய போது
என்னவன் என்ற மகிழ்ச்சி

நடந்தவை எல்லாம் நேற்றுப் போல
இன்றோ நான் ஒரு தொலைவில்
நீ ஒரு தொலைவில்

ஒரு ரோஐாவின் வேதனை:-

காதலிக்க தெரியாத
பெண்ணின் கூந்தலில்
இருப்பதை விட காதலிக்க
தெரிந்த ஆணின்
கல்லறையில் இருப்பது மேல்...!!!

குரங்கில்லை...

மரத்துக்கு மரம் தாவ
நான் ஒன்றும் குரங்கில்லை....
மனதை விட்டு மனம் தாவ
மனம் ஒன்றும் குரங்குமில்லை...

உன் பேரை சொல்லும் போதே

உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எ......ண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்

என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிரஎன் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லைபெண்ணே பெண்ணே

காதல் என்று ஒரு வார்த்தை

எப்போது சொல்லிக்கொள்வாய்?
என்னை நீ காதலிப்பதாய்!!!!
காத்திருப்பேன் உன் பூவிதழ் வரைந்திடும்
அந்த பொன்மொழிக்காய்
என்றென்றும் காத்திருப்பேன்
காலமெல்லாம் உன் நினைவுடனேயே வாழமுடியும்
காதல் என்று ஒரு வார்த்தை
எனக்குள் நீ விதைத்தால்....!!!!!

நினைப்பதற்கு பல நினைவுகள்

நினைப்பதற்கு பல நினைவுகள்
இருந்தபோதும் - உன்
நினைவை விட
இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை...!!!!

உலகை புரிந்து நட.........

சதியால் எமை பிரிக்க பலபேர்.......
விதியால் எமை இணைக்க சிலபேர்.
உள்ளத்தாலே உணர்ந்து நட..
உலகை புரிந்து நட.........

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அண......ைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லைஅ
ந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலைஅ
வள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

புரியவில்லை எனக்கு..

என் மெளனங்கனள
எல்லாம் புரிந்து கொண்ட உன்னால்
என் மனதை மட்டும் ஏன்
புரிந்து கொள்ள முடியவில்லை.
அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறாயா?
புரியவில்லை எனக்கு..

என் தெரிவா?? உன் தெரிவா??

அன்று
நீ முரண்பட்டு நின்றாய் என் காதல் பிழையென்று....
இன்று அதே நீ முரண்பட்டு
நிற்கின்றாய் உன் தெரிவு பிழையென்று...
இடையில் இடம்பெற்ற முரண்பாடு என்
தெரிவா?? உன் தெரிவா??

சொல்ல வேண்டுமென்கிற தவிப்பில்தான் வருகிறேன்...

சொல்ல வேண்டுமென்கிற
தவிப்பில்தான் வருகிறேன்.

ஒவ்வொரு முறையும்
சொல்லாமலேயே திரும்ப நேர்கிறது.

சிலவற்றைச்
சொல்லாமலே
புரிந்துகொள்ள வேண்டுமென்பதை
யாருனக்குச் சொல்லித்தருவது?

உன்னை மறந்திட என்னிதையம் நினைக்குதம்மா...

உன்னை மறந்திட
என்னிதையம் நினைக்குதம்மா...
மதிகெட்ட மடநெஞ்சம்
உன்னினைவை துறக்குதம்மா...

நெஞ்சில் கூடுகட்டி
பொத்திவைத்த நினைவெல்லாம்...
கூட்டை உடைத்து
வெளியேறி போகுதம்மா...

நிலவு தேய்ந்திடலாம்
நினைவுகள் தேய்ந்திடுமா?
காதல் தந்த கனவுகள்
கண்ணை விட்டு போய்விடுமா?

கடைசி மூச்சிவரை
காத்திருக்க போவதாய்...
எழுதிவைத்த கவிதையெல்லாம்
பொய்யாகி போய்விடுமா?

உன்னோடு வாழ்ந்திட
வழியில்லை என்றபின்னும்...
உன் நினைவோடு வாழ்வதாய்
நெஞ்சிக்கு சொல்லிவைத்தேன்...

நினைவை சுமந்துவாழ
நெஞ்சம் மறுக்குதம்மா...
உன்னை மறக்கச்சொல்லி
என்னை வருத்துதம்மா...

காலம் தன் வாளெடுத்து
நினைவுகளை வேட்டையாட...
காதலின் கால்தடம்
ஒவ்வொன்றாய் மறையுதம்மா...

நீ விட்டுச்சென்ற கால்தடத்தில்
நடைபழகி பார்த்ததும்...
தொட்டுச்சென்ற பொருளையெல்லாம்
சேர்த்துவைத்த நாட்களும்...

காலமெல்லாம் என் நெஞ்சில்
நிலைத்திருக்க கூடாத...
நினைவோடு வாழ்வதெல்லாம்
நிஜவாழ்வில் நடக்காத...

மறக்கத்தான் வேண்டுமென்று
விதியொன்று இருக்குமென்றால்...
அன்றே நான் இறப்பதும்
விதியென்று செய்திடுவேன்...

வாழும்வரை உந்தன்
நினைவுகள் சுமந்திருப்பேன்...
என் கடைசி கவிதையிலும்
உன் பேரெழுதி வைத்திருப்பேன்...

புரியவில்லை....

என் பாதையின் தூரம் தெரியவில்லை...
முடிவு என்பது என்னவென்றும் புரியவில்லை....

நீ எனக்கு சொந்தம் இல்லை

நீ எனக்கு சொந்தம் இல்லை
என்று சொன்ன போது
மனசு வெந்து போச்சு.
என் நிலலு கூட
இப்ப இரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சு

பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!

நான் பிறந்த பிறப்பின் பயனை
முதன்முதலில் உனைச் சந்தித்த
போதுதான் தெரிந்தது..!
அழகென்பது முகத்தில் இல்லை
அகத்தில்தான் இருக்கிறது என்பதே
உன்னுடன் பழகிய போதுதான் தெரிந்தது..!
பிரிவென்பது கொடும் நோயென்று
எனை விட்டு நீ பிரிந்த போதுதான் தெரிந்தது..!
ஆதலால் அன்பே…
எனை விட்டுச் செல்லாதே…
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!

இறந்து விடுகிறேன்

முடிந்த அளவு
உன்னை மறந்து
விடமுயச்சிக்கிறேன்
முடியவில்லை என்றால்
இறந்து விடுகிறேன்

எதுவாக என்றாலும்......

உன் வரவிற்காய் என் இரு விழிகள்
உன் அன்பிற்காய் என் இதயம்
உனக்காய் நான்,
நீ என் தோழியா, காதலியா?
என்றென்றும் நீ வேண்டும்
அது எதுவாக என்றாலும்..........................

வருகிறாயா?

உன் நினைவுகளோடு
தண்டவாளத்தில் கிடக்கிறேன்
நீ......!!!
நடந்து வருகிறாயா?
ரயிலில் வருகிறாயா?

என்னோடு நீயிருந்தால்.........

என்னோடு நீயிருந்தால் வானம் கூட என் கைவசம்..............
என்னை விட்டு நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்துடும்..............
உன் பெயரை உச்சரித்தே நிதமும் வாழ்கிறேன் ..............
அன்பே உன் சுவாசத்தில் மட்டுமே நான் வாசம் செய்வேன் ...

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?