Wednesday, March 31, 2010

உன்னை நான் விரும்பியிருந்தேன்

உன்னை நான் விரும்பியிருந்தேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாமல் - இன்று
உன்னால் நான் பிரிகிறேன்

உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்

உடலில் உயிர் உள்ளவரை
உன்னை நான் மறவேன்
உனக்காக என்றும் வேண்டி
உள்ளதில் நிதம் தொழுவேன்

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?