Sunday, December 12, 2010

உன் நினைவுகள்...!




மீண்டுமொருமுறை
உன்னை
நினைவுப் படுத்தாதேயென்று
எச்சரிக்கும் கணங்களிலும்
உள்நெஞ்சுக்குள்
உதித்தெழுகிறது
உன்முகம்...!

உறக்கம் வராத
நள்ளிரவு நேரமெங்கும்
உன்னை மறக்க துடித்தும்
என் இதயம் வழியே
நினைவை உமிழ்ந்து
உதடுகளும் உச்சரிக்கிறது
உன் பெயரை...!


குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!

போடி இவளே..

போடி இவளே..
நீயும்
உன் காதலும்
மன்னாங்கட்டியுமென சலித்தாலும்
கால்கள் உன் பின்னேயும்
மனசு உன் முன்னேயும் தானே
கிடக்கிறது!

Thursday, December 9, 2010

இறந்து விடுகிறேன்!!!



முடிந்த அளவு உன்னை 
மறந்து விடுகிறேன் !!!!
முடியவில்லை என்றால் 
இறந்து விடுகிறேன் !!!

Thursday, December 2, 2010

மிரட்டுகிறது,

"என் இதயம் என்னை மிரட்டுகிறது,
உன்னை ஒரு கணம் நினைக்க மறந்தாலும்
மறுகணம் துடிக்க மாட்டேன் என்று...!!"

Wednesday, December 1, 2010

மறந்து இருப்பேன்

"பிரிந்திருந்தாலும் மறந்து இருப்பேன். 

உன் நினைவை அல்ல பிரிவை..!!"

மரணம் நிச்சயம்

"உன்னை நேசித்திருந்தால் 

மறுக்கவோ, மறக்கவோ செய்திருப்பேன் ....

ஆனால் நான் உன்னை சுவாசிக்கிறேன் ...

மறுத்தாலோ, மறந்தாலோ, 

மரணம் நிச்சயம்"

காத்திருப்புகள்

"காத்திருப்புகள் சுகமாக தெரிந்தாலும்
அவை ஏமாற்றமாகும் போது
கண்கள் உன்னை அறியாமலே
கண்ணீர் சிந்தும்"

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?