Sunday, December 12, 2010
உன் நினைவுகள்...!
மீண்டுமொருமுறை
உன்னை
நினைவுப் படுத்தாதேயென்று
எச்சரிக்கும் கணங்களிலும்
உள்நெஞ்சுக்குள்
உதித்தெழுகிறது
உன்முகம்...!
உறக்கம் வராத
நள்ளிரவு நேரமெங்கும்
உன்னை மறக்க துடித்தும்
என் இதயம் வழியே
நினைவை உமிழ்ந்து
உதடுகளும் உச்சரிக்கிறது
உன் பெயரை...!
குருதிக் குழாய்களுக்குள்
குறுக்கு நெடுக்குமாய்
பாய்ந்துக் கொண்டிருக்கிறது
இதயத்திற்குள் நிரம்பி வழிந்த
உன் நினைவுகள்...!
Thursday, December 9, 2010
Thursday, December 2, 2010
மிரட்டுகிறது,
"என் இதயம் என்னை மிரட்டுகிறது,
உன்னை ஒரு கணம் நினைக்க மறந்தாலும்
மறுகணம் துடிக்க மாட்டேன் என்று...!!"
உன்னை ஒரு கணம் நினைக்க மறந்தாலும்
மறுகணம் துடிக்க மாட்டேன் என்று...!!"
Wednesday, December 1, 2010
மரணம் நிச்சயம்
"உன்னை நேசித்திருந்தால்
மறுக்கவோ, மறக்கவோ செய்திருப்பேன் ....
ஆனால் நான் உன்னை சுவாசிக்கிறேன் ...
மறுத்தாலோ, மறந்தாலோ,
மரணம் நிச்சயம்"
Subscribe to:
Posts (Atom)