Sunday, October 24, 2010

கற்று கொடுக்கிறேன் வலிகளை……

நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கோ ஒரு மூலையிலிருந்து நீ
என்னை நேசித்தாய்…..
என்றாவது ஒரு நாள்
நீயும் என்னை
வெறுப்பதாய் இருந்தால்
அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை……

"மறந்துவிடு!"

ஒரு வார்த்தையில்
சொல்லிவிட்டாய்
"மறந்துவிடு!" என்று
உன் அந்த ஒரு வார்த்தையால்
ஏற்பட்ட வலி பற்றி
உனக்கு எங்கே தெரியப்போகிறது!!

பிரிவு

நீ இருக்க விரும்பாத என் இதயத்தை
நெருப்பில் இட்டுவிட நினைக்கிறேன்!!!
ஆனால் மனம் வரவில்லை
உன் நினைவுகளும்
எரிந்துவிடுமே என்ற தயக்கத்தில்!!!

கவிதையாய்.........

உனக்கு கவிதை எழுத
தெரியாது என்று யார் சொன்னார்கள்...
உன் புத்தகம் அனைத்திலும்
எழுதி இருக்கிறாயே...
உன் பெயரே ஒரு கவிதையாய்.........

சொல்லி விட போகிறேன்...

சொல்லி விட போகிறேன்...
ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும்
உன் ஓரப் பார்வையும்..
கண்கள் கொண்டு நீ புரியும்
காதல் போரும்...
காயம்பட்டு வீழ்ந்து கிடக்கிறேன்.
மரணம் கூட பழகலாம் போல...
மன'ரணம்'..... கடினமாயிருக்கிறது.
மௌனம் உணர மறுக்கும் உனக்கு...
வார்த்தைகள் கொண்டே
சொல்லி விட போகிறேன்...
உனக்கான என் காதலை...

உன் நினைவுகள்

உன் நினைவுகள்
என் இரவுகளை
தின்றுகொன்டிருக்கின்ற்ன...

என்னோடு எப்போதும்
பேசும் நிலவிற்கு
இப்போதெல்லாம்
பதில் சொல்வதில்லை...

நீ கடக்கும்
இடமெல்லாம் என்
காலடிகள் காத்துகிடக்கின்றன...

எனக்கான உனது
பார்வைகாக
என் வாழ்வு
நகர்ந்து கொன்டிருக்கிறது...

" முகவரி "

எனக்கு
முகவரி இல்லை
என்றாலும்
உன்னுடைய
நிரந்திர முகவரி
நான் தான்.....

Tuesday, October 19, 2010

அன்பே !!!!!!

என்னோடு நீயிருந்தால்
வானம் கூட என் கைவசம்.....
என்னை விட்டு
நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்துடும்......
உன் பெயரை உச்சரித்தே
நிதமும் வாழ்கிறேன் .......
அன்பே
உன் சுவாசத்தில் மட்டுமே
நான் வாசம் செய்வேன் ..........!!!!!

நான் நானாக இல்லை...

காதல் வழியும் கண்களை
சிதைக்கும் புன்னகையை
உயிர் தொடும் விரல்களை
தூக்கம் பறிக்கும் குரலை
நிலை தடுமாற வைக்கும்
எல்லாம் மறந்து விடுகிறேன்
என்னை
மட்டும் திருப்பித்தந்து விடு
நான் நானாக இல்லை...

நம் காதல்..

உயிரெழுத்து நீயானாய்.
மெய்யெழுத்து நானானேன்.
இருவரும் சேர்ந்தோம்,
உயிர்மெய் எழுத்தானது
நம் காதல்.........

" ஒருத்தன் "

சிலவேளைகளில்
உன் வாழ்கையில் ஒருத்தர் இருக்கலாம் - அல்லது
உன் இதயத்தில் ஒருத்தர் இருக்கலாம் - அல்லது
உன் கனவு உலகில் ஒருத்தர் இருக்கலாம் -ஆனால்
நானும் உன்னுடைய ஒருத்தன் தான்! ...
உனகென்று எவரும் இல்லாதபோது.........

"உன் காதல் நினைவுகளை"

பிறக்கும் போது
நான் எதையும்
கொண்டு வரவில்லை ஆனால்;
நான்
இறக்கும் போது
கண்டிபாக கொண்டு செல்வேன்
"உன் காதல் நினைவுகளை"

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?