Monday, April 26, 2010

என் மரணம்!















என் மரண வீட்டுக்கு
வர வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட
உங்களைப் பார்த்து
புன்னகைக்க முயற்சிக்கிறேன்!
நீங்கள் நிற்பது பற்றியும்
இருப்பது பற்றியும்
இன்னும் முடிவெடுக்கவில்லை
என்பது புரிகிறது!
நானும் தான்!

உங்களை வரவேற்பது குறித்து
சொல்லிவிட மறந்துவிட்டேன்;
இப்போதும் தாமதமாகவில்லை!
ஆனால் பூக்களின் மென்மையும்
மெத்தையின் சுகமும்
தடுத்துக் கொண்டிருக்கின்றன
எழும்புவதிலிருந்து;
முதன் முறையாக
அனுபவிப்பதால் இருக்கும்!
மன்னித்துவிடுங்கள்;
நாளை உங்களின் விமர்சனம்
இதைத் தவிர்த்து
வெளி வரட்டும்!

உச்சத்தில் அழும்
அவள் குறித்து
எனக்கு எந்தவித
பிரக்ஞைகளும் இல்லை;
என் அம்மாவாக இருக்கலாம்
நீங்கள் யோசிக்காதீர்கள்!
ஒரு கிழமை அதிகம்;
பிறகு சாப்பிடத்தான் வேண்டும்!

உங்கள் விசயத்துக்கு வருவோம்;
நீங்களும் பாவம்;
கறுப்பு ஆடைக்கும்
கொத்துப் பூவுக்கும்
அவகாசமில்லாமல்
அவதிப்படலாயிற்று!
கூடவே கண்ணீருக்கும்;
நீங்கள் எங்கே தான்
போவீர்கள்;

நேற்றைய எனக்கும்
இன்றைய உடலுக்கும்
அடையாளங் கண்டு தோற்று
பிதற்றத் தொடங்கியிருக்கிறீர்கள்;
"நல்ல ஆத்மா"
சிரிப்பு வருகிறது!
உதடுகள் அசைவதை
நீங்கள் கவனிக்கவில்லை
என்னை புறக்கணிப்பது
எப்போதும் இலகுவாக இருக்கிறது
உங்களுக்கு!

உங்கள் கண்ணீரின் ஈரம்
சீக்கிரம் காய்வது குறித்து
விசனமுறத் தொடங்கியிருக்கிறீர்கள்!
இதற்கும் ஒரு விதி
நேற்றே செய்திருக்கலாம் என்று
நீங்கள் யோசிப்பது புரிகிறது;
எனக்கெங்கே தெரியும்
இன்று இங்கே கிடப்பேனென்று
எல்லோரும் இதைத்தானே
இலகுவாக மறக்கிறோம்!

நான் உங்களுக்கு
என்ன செய்திருக்கிறேன்
என்பது நினைவிலில்லை;
நான் இந்த சமூகத்தில்
பிறப்பிக்கப்பட்டவள்!
விதிகளால் வளர்க்கப்பட்டவள்!
தீயதை நினைவுபடுத்துதல்
அந்த ஆயிரங்களில் ஒன்று!

சரி விடுங்கள்!
உங்களை நினைவுபடுத்தலாம்!
மூலையில் நிற்பவளுக்கும்
எனக்குமான வஞ்சம்
தீர்க்கப்படாது கிடக்கிறது!
ஆசைப் புதைகுழியில்
அமிழ்த்தப்பட்டு நிற்கிறது
பகிரப்பட்ட அன்பு!
ஈரமான காதல் கனவுகளுடன்
அங்கேயே திரிகிறது மனது!

ஏதோவொன்றுக்கான ஆதங்கத்தில்
எறியப்பட்டுக் கிடக்கிறது உயிர்!
அதோ! அந்தரத்தில்!
கடக்கப்பட்ட தருணங்களின்
கழிவுகளில் தொலைந்த
பாதி வாழ்க்கை
எரிந்து கொண்டிருக்கிறது
இதோ! இங்கே!
சாம்பலுடன்;
சாம்பிராணிக் குச்சி!

நான் போகவேண்டும்;
இப்போது!
எங்கேயோ!
உங்கள் அரிதாரத்தை
இங்கே வீணாக்காதீர்கள்!
நாளை நான் மீளப்
பிறக்கப் போவதில்லை!
வாழ்க்கை இனியில்லை!
இதற்குப் பிறகில்லை!


படித்ததில் பிடித்தது

Friday, April 9, 2010

மறந்துவிடவே நினைக்கிறேன்

நீ
மறந்துவிட சொல்லும்
பொழுதுகளிலெல்லாம்
மறந்துவிடவே நினைக்கிறேன்
உன்னை அல்ல
உயிரை..!!!!

உயிர் அழும் ஓசை

உன்
முகம் காண
ஆண்டுகளாகக் காத்திருந்தேன்

நீயோ
என் கண்களில்
உன் பிரிவின் கண்ணீரை
தந்து விட்டு
என் கண் மறைவாய்
சென்று விட்டாய்

ஆயிரம் சொந்தங்கள்
என்னுடன் இருந்தும்
நீ இல்லாத் தனிமையில்
உயிர் தவிக்கிறேன்

என் உயிர் அழும் ஓசை
உனக்கு
கேட்கவில்லையா ?

உன் நினைவுகள்

உன்னை
மறக்கவேண்டும் என்று
உன் நினைவை விட்டு விலகி
ஓடிக்கொண்டே இருகிறேன்

நான் ஓடும்போதெல்லாம்
என் நிழலாக
உன் நினைவுகளே
என்னை
துரத்திக்கொண்டு வருகிறது

எங்கும் நிறைந்திருக்கும்
வானம் போல்

உன் நினைவுகளே
என் மனவானில்
என்றும் நிலைத்திருக்கிறது

நீயில்லாத நான்

நீயில்லாத நான்
நிலவில்லா வானம்

நீயில்லாத நான்
நிறமில்லா வானவில்

நீயில்லாத நான்
மழையில்லா மேகம்

நீயில்லாத நான்
நீரில்லா மீன்

நீயில்லாத நான்
ஓலியில்லா ஓசை

நீயில்லாத நான்
நிறமில்லா ஓவியம்

நீயில்லாத நான்
இமையில்லா தூக்கம்

நீயில்லாத நான்
துடிப்பில்லா இதயம்

நீயில்லாத நான்
உயிரில்லா உருவம்

நீயில்லாத நான்
முடிவில்லா இந்த கவிதை

உன் இதயம் மறுப்பதேன்

ஒரு நிமிடம்
என் விழிகள் காண
உன் முகம் தருவாயா

அந்த சிறு நிமிடம்
பெரும் யுகமாகும்
வரம் தருவாயா

என் விழிகள் மூடி
உன்னை நினைக்கையில்
மட்டும்
அழுகை வருவதேன்

என் அளவில்லா
அன்பை நினைக்க
மட்டும்
உன் இதயம் மறுப்பதேன்

நான் தெரிந்துகொண்டேன்

என் முகம் காண மறுக்கும் உன் விழியில்

என் காதோடு பேச மறுக்கும் உன் குரலில்

என் நினைவை நினைக்க மறுக்கும் உன் நினைவில்

என் துடிப்பை உணர மறுக்கும் உன் மனதில்

என்னையே மறக்க நினைக்கும் உன்னில்

நான் தெரிந்துகொண்டேன்

என்னை நீ வெறுத்து சென்றதை

என் உயிரை உன்னோடு எடுத்து சென்றதை

அவள்

என் கவிதையின்
கருவானவள் - அவள்

என் வரிகளின்
உருவானவள் – அவள்

என் மகிழ்ச்சியின்
பிறந்தநாள் – அவள்

என் பகலின்
விழிப்பானவள் – அவள்

என் இரவின்
உறக்கமானவள் – அவள்

என் விழியின்
ஒளியானவள் – அவள்

என் நினைவின்
நிஜமானவள் – அவள்

என் உயிரின்
துடிப்பானவள் – அவள்

என் இதயத்தின்
வாசமானவள் – அவள்

இன்று இல்லை
என்வசம் – அவள்

நீ வருவாயா…?

நீ என்னை விட்டுப்
பிரிந்து தொலைவில்
சென்று விட்டாய்

நீ தொலைத்த இடத்தில்
உன் நினைவுடன் என்றும்

உனக்காகக் காத்திருக்கிறேன்
யுகங்கள் காத்திருப்பேன்

உன் விழியை
ஒரு முறை காண

உன் மொழியை
ஒரு முறை கேட்க

நீ வருவாயா…?
உனக்காகக் காத்திருக்கிறேன்

மறக்க நினைத்தாலும்..!!!

நீ வேறு, நான் வேறல்ல
என்பதாய் வளர்ந்தது
நம் நட்பு

நினைத்துக் கூட
பார்க்கவில்லை
நீ என்னை
பிரிவாய்யென்று

என்னை நீ
மறந்ததை நினைத்து
துடித்துப் போகிறேன்!

எதை நினைப்பேன்
எதை மறப்பேன்

நான் உன்னை
சந்திக்காமலே
இருந்திருக்கலாம்

என் உயிரையும் தாண்டி
சென்று விட்டது
உன் நினைவுகள்

உன்னை மறப்பதா
என்னையே மறப்பதா
முடிவெடுக்க முடியாமல்
தவிக்கிறேன்

உன்னை மறக்க நினைத்தால்
என்னையே மறக்க செய்கிறது
உன் நினைவுகள்

நான் சுவசிப்பதையே..!!

என் விரல்கள்
உன் பெயரை எழுத மறந்தால்
என் கைகளை
நானே துண்டித்துவிடுவேன்

என் நடைகள்
உன் பாதை நடக்க மறந்தால்
என் கால்களை
நானே முறித்துவிடுவேன்

என் விழிகள்
உன் முகம் காண மறந்தால்
என் இமைகளை
நானே எரித்துவிடுவேன்

என் நினைவு
உன்னை நினைக்க மறந்தால்
என் நினைவை
நானே அழித்துவிடுவேன்

என் இதயம்
உன்னில் துடிக்க மறந்தால்
என் துடிப்பை
நானே தடுத்துவிடுவேன்

என் உயிர்
உன்னை தேட மறந்தால்
நான் சுவசிப்பதையே நிறுத்திவிடுவேன்

உயிர் வாழ்கிறாய் – நீ

என் இதயம் துடிப்பதை
நான் இதுவரை
கண்டதில்லை

இன்று கண்டுகொண்டேன்
உன் அன்பின் ஆழத்தில்

விடாமல் துடிக்கும்
என் இதய துடிப்பாய்
என்னுள் என்றும்
உயிர் வாழ்கிறாய் – நீ

நான் மறக்கவில்லை..........

மறக்கவே முடியவில்லை
உன்னை சந்தித்தபின்
உன்னுடன் சேர்ந்து வலம் வந்த
அந்த இனிய நாட்களை

என் உள்ளத்தின்
உள்ளில் பொங்கியெழும்
உன் நினைவுகளை மட்டுமே
நினைத்துக்கொண்டு
என் நாட்களை
நான் கடந்துவருகிறேன்

உன் நினைவுகளால்
என் இதயம் நிறைந்த
அந்த அழகான நாட்களை
கவிதையாக எழுதிட
இன்னமும் வார்த்தைகளை
தேடிக் கொண்டிருக்கிறேன்
வழிந்தோடும் என் கண்ணீருடன்..!!!
நம் நினைவுகளை
கடந்து வந்த
அந்த வசந்த நாட்களை
நான் மறக்கவில்லை
மறக்கவும் முயல்வதில்லை....

உன் நினைவுகள் என்னில்..!!!

உன்னை பிரிந்தால்
உயிர் பிரியும் நிலையில்
நானிருப்பேன் என்று தெரிந்தும்
நீ பிரிந்து சென்று விட்டாய்

நாளை சரியாகிவிடும்
என்று எண்ணியே தினமும்
என் இரவை சந்திக்கிறேன்

எல்லாம் முடிந்துவிட்டது என்பதை
ஏன் தான் ஏற்க மறுக்கிறது
என் அறியா மனம்

எவ்வளவோ முயன்றும்
தூக்கம் தொலைகிறேன்
உன் நினைவுகளில்

நான் பேசிய வார்த்தைகள்
உன்னில்
அழிந்து போகலாம்

நாம் பழகிய நாட்கள்
உன்னில்
இறந்து போகலாம்

உன் சத்தியங்கள்
உன்னில்
மறைந்து போகலாம்

இந்த உலகமே
உன்னைப் போல்
உருமாறிப் போனாலும்

உன் நினைவுகள் என்னில்
என்றும் உயிர் வாழ்ந்து
கொண்டேயிருக்கும்

நீ என்னை மறக்கும் தோறும்..!!!

என் உள்ளத்தின்
காயங்களை எல்லாம்
உன்னிடம்
சொல்லத் துடிக்கிறேன்

நான் காத்திருந்தாலும்
கவனிக்காததுபோல்
என்னை காயப்படுத்திச்
செல்கிறாய்!

நீ என்னை
வெறுத்து போகும்
ஒவ்வொரு கணமும்
கடலாய் கண்ணீர் வடிக்கிறேன்!

நீ என்னை தவிர்ப்பதை
உணர்ந்து
உயிர் தவித்து போகிறேன்

நாம் ஒன்றாகப் பயணித்த
நம் பாதச் சுவடுகள்
இன்றும் என் மனதில்
ஒன்றாகவே இருக்கின்றன

நீ எனக்குள் இத்தனை
வலிகளை தந்தபோதும்
உன் நினைவுகள் எதையும்
நான் அழிக்கவில்லை

என்னுயிரை நானே
எப்படி அழிக்க முடியும்

நீ என்னை மறக்கும் தோறும்
உன் நினைவுகள் என் நெஞ்சில்
உயிர்த்தெழுந்து கொண்டேயிருக்கும்

Thursday, April 8, 2010

நான் மட்டும் எதற்காக…?

ஓர் சந்தோசப் பூங்காவை
என் நெஞ்சோடு நான் வளர்க்க
அதில் உன் பிரிவு தீயை மூட்டி
எனை விட்டு விலகி சென்றுவிட்டாய்

நம் உண்மைகள் எல்லாம்
உன்னால் இல்லை என்று ஆனபோது
வார்த்தை தீர்ந்த ஓர் ஊமைபோல்
ஊனமாகி உடைந்து போனேன்

அழுதழுது களைத்து விட்டேன்
அழுவதற்கு இனி கண்ணீருமில்லை
இழந்து விட்டேன் எல்லாம்
இனி இழப்பதற்கு என்று ஏதுமில்லை!

நான் என்பதே
என்னுடன் நீயிருக்கும் வரைதான்
இனி நீ இல்லை என்றானபோது
நான் மட்டும் எதற்காக…?

என் பிரிவையும் கொஞ்சம் நேசிப்பாயா..????

சத்தமில்லாமல்
என் இதயம் நுழைந்தாய்
நான் கண்ணிமைக்கும் நேரத்தில்
எனை கடந்து சென்று விட்டாய்

நீ வந்து போனதன் அடையாளமாய்
உடைந்து போன என் இதயத்துடன்
நான் மட்டும் இன்னமும் அங்கேயே
நின்றுகொண்டிருக்கிறேன்

கோபம் கூடக் கரைந்துபோகுமே
சில நாட்களில்…
என் மேல் நீ கொண்டிருப்பது
அந்த கோபத்தை விடக் கொடியதா ?

உன்னை மறந்துவிடுகிறேன் என
மறக்க நினைக்கிற
என் ஒவ்வொரு நொடியிலும்
நூறு முறை அதிகமாக
என் நினைவில் உயிர்க்கிறாய்

பிரிவு என்பதே
மீண்டும் உறவுக்காகத்தான்

உன் பிரிவின் வலியை கூட
சுகாமாகவே உணர்கிறேன்

என் பிரிவையும் கொஞ்சம்
நேசிப்பாயா..????

என் உயிரை விட மேலானது.!!!!

என் உயிரின் ஒவ்வொரு துளியில்
கண்ணீராய் வாழும் என் உயிரே

ஏன் என்னை வெறுக்குறாய்
நான் மௌனமாய் திரும்பி அழுகிறேன்
எனக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை

என்னை நீ எப்படி வேண்டுமானாலும்
வெறுத்துக்கொள்
ஆனால் என் இதயம் தொடும்
தூரத்திலேயே இரு

எனக்குள் உன் அன்பை
ஆழமாக புதைத்தவள் நீதானே

நெஞ்சில் எனக்கான அத்தனை
அன்பையும் வைத்துக்கொண்டு
வெறுப்பதாய் ஏன் உதடுகளால் நடிக்கிறாய்

உன் மீதான என் அன்பு என்பது
என் உயிரை விட மேலானது
என்பது உனக்கு தெரியாதா?

உன்னை மட்டுமே தேடுகிறேன்..!!!

தினமும் என் மனதில் நீ
புதிதாய் பிறக்கிறாய்
உன் நினைவை என்னில்
நிலைக்க வைக்கிறாய்

என் எண்ணங்கள் அனைத்தையும்
உனக்காக என மாற்றிவிட்டு
என் உயிராக உன்னை
உருமாற்றி செல்கிறாய்

என் உயிரில் என்றும்
உன் உருவமே

என் உணர்வில் என்றும்
உன் நினைவே

என் உச்சரிப்பில் என்றும்
உன் குரலே

என் விழிகளில் என்றும்
உன் முகமே

என் மூச்சில் என்றும்
உன் சுவாசமே

ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்
என் உயிர் தேடும்
ஒரே உறவாக
உன்னை மட்டுமே காண்கிறேன்

நான் என்றும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்

உன்னை நினைபதற்க்காக மட்டுமே
நான் இன்றும் இருக்கிறேன்

தொலைவினில் நீ இருந்தாலும்!!!

இமை பொழுது மட்டுமே
உன்னை மறக்க நினைத்தால்
கோடி முறை உதிக்கிறாய் என்னில்

உன்னை பிரிய நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
ஓர் உயிர் பிரியும் வலி என்னில்

உன் ஒரு நொடி
மௌனத்தைக் கூட
என்னால் தாங்க முடியவில்லை

இனி நீ இல்லாத என் நாட்களை
எப்படி என் இதயம் தாங்கும்?

உன் தொலைவினில் நான் இருந்தாலும்
என் அருகினில்தான் நீ என்றும்

எப்படி முடிந்தது..???

எப்படி முடிந்தது..???
உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது..???
என் இதயத்தின் துடிப்பாக
உன் இதயத்தை
கொடுத்துவிட்டு
என்னை மறந்துபோக !!!!

உனக்கு மட்டுமா?
இல்லை இல்லை
எனக்கே என்னை
கிடைக்காமல்
செய்து விட்டாயே??

நீ உடைத்து போன
என் இதயத்தை ஒட்டவைக்க
இன்றும் முயற்சிக்கிறேன்
முடியவில்லை

பாதியை வைத்து கொண்டு
என்ன செய்வேன்?
மீதி இன்னமும்
உன்னில் இருக்கையில்..!!!

என்ன செய்வேன் ?

நீ போகாத இடத்திற்கு
மிக அவசரமாய்ப் போகிறேன்
பிறகு பேசுகிறேன் என்றாய்
ஒரு நாள்

இல்லாத வேலையின்
பெயரை சொல்லி
சில அவசர வார்த்தைகளோடு
தொலைபேசியை அணைத்தாய்
மறுநாள்

நான் அனுப்பிய
குறுந்செய்தியின் பதிலுக்காக
காரணமின்றி என்னை
காத்திருக்க வைத்தாய்
வேறு ஒரு நாள்

என்னுடனான உன்
கடித தொடர்பையும்
காரணமின்றி
துண்டித்துவிட்டாய்
இன்னும் ஒரு நாள்

உன்னால் வேண்டாமென்று
வீசி எறியபட்ட
கண்ணாடியாய் இப்போது
உடைந்து சிதறி போய் விட்டேன்

இப்படி நீ என்னை
தவிர்த்தும் கூட

இதை அனைத்தையும் அறியாது
உன் பெயர் சொல்லி துடிக்கும்

என் இதயத்தை
என்ன செய்வேன் ?

நீ தெரிந்துகொள்வாய்…!!!

ஓர் அதிகாலையின்
அமைதியில்
சின்ன சின்ன
சண்டையுடன்தான்
ஆரம்பமானது
உனக்கும் எனக்குமான
பெயரிடப்படாத நம் உறவு

உன் ஒவ்வொரு
அசைவுகளையும்
என்னுடன் நீ
பகிர்ந்து கொண்டாய்

உன் நிகரில்லா
அன்பை தந்து
என்னில் உன்னை
உணர வைத்தாய்

உன் ஒவ்வொரு
வார்த்தையிலும்
உன் ஒவ்வொரு
நாளிலும்
உன் ஒவ்வொரு
நொடியிலும்
உன்னுடன் நான்
வாழ்ந்து இருக்கிறேன்

என்னிடம் இருந்த
நீ இன்றும்
அப்படியேதான் இருக்கிறாய்

என்னில் பாதியாக
என் இதயத்தின் பாதியாக
என் உயிரில் பாதியாக
இன்றும் நீயே!!!

என் நாட்களின்
ஒவ்வொரு விடியலிலும்
உன் வரவுக்காக
நான் காத்திருக்கிறேன்

நீயில்லாத
என் ஒவ்வொரு நொடியும்
எனக்கு கடினமாகவே
கரைகிறது

உன்னால் மௌனமாக
தொலைக்கபட்ட
அந்நாட்களை
நீ நினைத்துபார்

தெரிந்துகொள்வாய்
என் உயிரின் பாதியாக
இருந்த உன்னை !!!!

உன் நினைவுகளுடனே..!!

என் இதய சுவரில்
உன் அன்பால்
நான் எழுதிய
அழகிய கவிதையே

என் நொடிகள்
தோறும் என்னில்
உதிக்கும்
உன் நினைவுகளை

உன்னை நினைக்கும்
என் தவிப்புகளை
உன்னிடம்
சொல்ல துடிக்கிறேன்
நான் எப்படி
உணர்த்துவேன்
நீ எப்படி உணர்ந்து
கொள்ள போகிறாய்?

நீ ஏன்
என் இதயத்தில்
விழுந்தாய்?
மனமுடைந்து போகிறேன்

என் நினைவுகள்
எல்லாம்
உன்னையே தேடுகிறது

உன் பிரிவை எண்ணி
தினமும் தவிக்கிறேன்

உன்னை தேடியே
என் நினைவுகள்
கரைந்து கொண்டிருக்கிறது

உன் வருகைக்காக
நான் காத்திருக்கிறேன்

உன்
நினைவுகளுடனே
நான் இன்றும்
வாழ்ந்து வருகிறேன்

இப்போதும் நான் அழவில்லை.......

அன்று
நான் தோற்றுப்போய்
துவண்டிருந்த பொழுது
கண்கள் கலங்க என்னிடம்
சொன்னாய்

இனி உன் கண்கள் அழவேண்டாம்
உனக்காக எப்போதும் அழும்
என் கண்கள் என்று

இன்று
என் பார்வை கூட
உன்னிடம் பட வேண்டாம் என்கிறாய்

இப்போதும் நான் அழவில்லை
உன் கண்கள் உடனில்லை என்பதால்..!!!!

நானும் நீயும்

என் தனிமையில்
நிரம்பியிருப்பவை
மௌனமும்
கவிதையும்
மட்டுமல்ல,
நீ கூடத்தான்!
எனது வெறுமையில்
உடனிருப்பது
மெல்லிசை
மட்டுமல்ல,
உன் நினைவுகளும்தான்!

உனக்கு நினைவிருக்கிறதா?

இன்று நீ எனக்கு
விடை கொடுத்திருக்கலாம்
என் நினைவுகளுக்கு
தடையும் விதித்திருக்கலாம்

உனக்கு நினைவிருக்கிறதா?
நீ எனக்கு
தினமும் எழுதிய கடிதங்களை

காலம் தவறாத உன்
தொலைபேசி அழைப்புகளை

உன்னை சந்திக்கும் முன்
என்னுடன் இருந்த தோழமையை
நீ கோபம் கொண்டதை

உன் அன்பு என்னில் வலுப்பட
காரணமே இல்லாமல்
என்னுடனான உன் சண்டைகளை

உனக்காக நான் இழந்த
என் இரவுகளை

உனக்காக நான் தொலைத்த
என் உறவுகளை

நாம் ஒன்றாய் சந்தித்த
அந்த இனிய தருணங்களை
எளிதாக நீ மறந்ததுதான்
இன்னும் என்னால்
நம்ப முடியவில்லை

அமைதியாக இருந்த
என் மனதை உன் வரவால்
சலனப்படுதிவிட்டாய்

தென்றலாக
இருந்த என்னை
உன் பிரிவு புயலால்
தத்தளிக்க வைத்து விட்டாய்

அன்று என்னை பிடித்ததற்கும்
இன்று என்னை பிரிந்ததற்கும்
உன்னால் காரணம்
கண்டுபிடித்து சொல்ல முடிகிறது

நீ என்னை
மறந்ததை உணர்ந்து
என்னையே மறந்து போகிறேன்

நான் தவறாய் எழுதிய
என் வாழ்க்கைக் கணக்கில்
விடை மட்டும்
என்ன சரியாக வருமா ?

கனவாகிடக் கூடாதா?

என்னால்
நினைத்து பார்க்க முடியவில்லை
நீயில்லாமல் நான் சந்திக்கும்
இந்த துயர நாட்களை

ஒரு சில நாட்கள் தான்
உன்னுடன் பேசவில்லை
இதர நாட்களில்
நாம் பேசவில்லையே என்ற
என் தயக்கமே
இந்த இடைவெளிக்கு
காரணமாகிவிட்டது

இன்று என்
ஒவ்வொரு நொடியிலும்
அதற்க்கான விளக்கம்
அளித்துக் கொண்டிருக்கிறேன்
நீ கேட்கப் போவதில்லை
என்று தெரிந்தும்

நீ என்னுடன்
இருக்கும் வரை
என்னை விட்டு உன்னால்
எங்கே சென்று விடமுடியும்
என்ற என் நம்பிக்கையின்
அலட்சியமாக இருந்தேன்

இன்று
என்னிடமே நீ சொல்லாமல்
சென்று விட்ட பிறகுதான்
காலம் கடந்துவிட்டதை
அறிந்து துடிக்கிறேன்

நான் காணாத
ஓர் கனவாகிடக் கூடாதா?
நீ என்னைக் கடந்து போனது..!!!!

என் நெஞ்சில் அமைதில்லை

என் நெஞ்சில் அமைதில்லை
உன் நெஞ்சில் இரக்கமில்லை
என் கண்ணில் நீர் இல்லை
உன் கண்ணில் இரக்கமில்லை
தேடி தேடி களைத்துவிட்டேன்
தேடவிட்டு தவிக்கவிடடாய்,பாவி
நான் உனக்கு செய்த பாவம் தான் என்ன,
பார முகமாய் நீ இருக்க காரணம் தான் என்ன,
கவி கொண்டு வர கண்ணதாசன தான் இல்லை ,
தூதுவிட இரவு சூரியனும் இல்லை..........

Wednesday, April 7, 2010

நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….!

என்னுள் காதலெனும்
செடியை நட்டாய்
இன்று மரமாகி நிற்கும் நாம் காதலை
விட்டுப்பிரிய நினைக்கும்
உன்னைத் திட்டக் கூட
மனமில்லாமல் தவிக்கிறேன்
நான் வாடி மடிந்தாலும்…
நீ வாழ்க என்று….!

நாம் ஒன்றாய் கழித்த அந்த
நினைவுகளை என்
இதயத்தில் செதுக்கி விட்டேன்
என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரிந்து
செல்ல நினைக்காதே……
நானில்லாமல் நீயிருப்பாய்………
ஆனால்…..
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….!

வாய் இருந்தும் ஊமையாய்.

உணர்வுகளை உண்மைகளை
உரைக்க முடியவில்லை.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லமுடியவில்லை.
சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவே முடியவில்லை.
வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
வார்த்தைகளை என்னால்
பிரசவிக்கவே முடியவில்லை.
ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
நிறைந்து வழிகின்றன.
ஆனால் நான் ஊமையில்லை.
என்னால் நன்றாக பேசமுடியும்
இருந்தும் என்னால் பேச முடியவில்லை.

ஏன்?
நான் பூரணமடையாதவனா?
இல்லை குறைபாடு உடையவனா?

என்னுள் மட்டுமே என்னால்
இன்னும் கேட்க முடிகிறது.அப்போதும்
வார்த்தைகள் வெளியே வரவேயில்லை.

ஆனால் பேசுகின்றேன்
நிறையவே பேசுகின்றேன்
வாய் இருந்தும் ஊமையாய்.

இன்னொருத்தனை…..

நேற்று வரை என்னை
துயிலெளுப்பிய குயில்
இன்று துயிலெளுப்புகிறது
இன்னொருத்தனை…..

கார‌ணம் என்ன‌???

என் காதலை உன்னிடம் சொல்ல தயங்குகிறேன் உயிரே!
காரணம்; உனது அப்பா, அம்மா மற்றும் உனது உற‌வினர்களுக்கு பயந்தல்ல!!!
நீ என் காதலை மெளனம்மாக்கிவிடுவாயோ என்றுதான்!!!
ஆனால் மெளன‌மாக‌ இருக்கவும் முடிய‌வில்லை!
கார‌ண‌ம்; க‌டைசிவ‌ரையிலும் என் காத‌லை உன்னிட‌ம் சொல்லாம‌ல் போய்விடுவேனோ என்றுதான்!!!
அத‌னால்தான் சொல்லாமல் சொன்னேன் என் காத‌லை உன்னிட‌ம்!
ஆனால் நீயோ என் காதலை புரிந்தும் புரியாம‌ல் இருந்துவிட்டாயே உயிரே!
அத‌ர்க்கு கார‌ணம் என்ன‌???

"நீயும் என்னைக் காதலித்தாயா"?

என்னவளே!
மீண்டும் சந்திப்போம்
அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!
"நீயும் என்னைக் காதலித்தாயா"?

அவதாரமாகப் பிறந்தவள்………

இந்த உலகத்தில்
எத்தனையோ பேர் கடவுளின்
அவதாரமாகப் பிறந்ததாக
இலக்கியங்கள் சொல்கின்றன
ஆனால் நீ ஒருத்திதான்
அவர்களையும் தாண்டி
காதலின் காதலின் அவதாரமாகப் பிறந்தவள்………

Tuesday, April 6, 2010

உயில்.........

கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே
காந்தப் பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே
தவறு நான் செய்யவில்லை
தண்டனை நீ தருகின்றாய்
சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து நீ போகின்றாய்
ஊமைக் குயிலடி நான்
உள்ளுக்குள் அழுகின்றேன்
ஓரிரு வார்த்தைளோ
மெல்ல மெல்ல கொல்லுதடி
என்
உதிரத்தால் எழுதி வைக்கும்
உண்மையடி பெண்ணே
நீ போகுமிடமெங்கும்
பாதி உயிரோடும்
என் பயணம் தொடரும்
புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே
இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்
அப்போதாவது
நீ என்னைக் காதலி.

பெண்னே..!

பெண்னே..!
உன் அழகில்
இயற்கையே குழம்பிப் போய்விட
இதுவரை பார்த்திருந்த நான்
என்வாகி இருப்பேன்
ஒரு முறை எண்ணிப்பாரடி..?

எப்போது நீ நிஜமாய் என் வாழ்வில் வருவாய்........!!!!

கனவாய் என் மனதில் வந்தாய்!
கவிதையாய் என் நாவில் வந்தாய்!
ஓவியமாய் என் விரலில் வந்தாய் !
எப்போது நீ.....!!
நிஜமாய் என் வாழ்வில் வருவாய்........!!!!

நான் இருப்பேன் இங்கே................

உனக்கும் எனக்கும் இருப்பது
இங்கே எவருக்கும் புரியாது
எதை நான் சொல்லி
எனை நான் காட்ட

எட்டாத தொலைவோடு நீயாம்
தரைமீது இலையாக நானாம்
யுகம் கடந்தாலும் முடியாதாம்
ஆராய்ச்சி முடிவென்று
இதை தான் தந்தார்கள்
பேதைகள் இவர்கள்

புன்னகைத்து கொண்டவன் நான்
பதில் சொல்ல துணிந்தேன்

“ நீ வந்த திசை பார்த்து
நான் விழி திறந்தேன்
நீ போகும் வழி தானே
நான் போ...கும் வழி என்பேன்
நீ மறையும் இடம் பார்த்தே
நான் மடிந்து போவேன் ”

அந்த ஒரு நாள் உன்னோடு
எனக்கு போதும் - அது
மறு நாள் நீ வரும் வரை
மொட்டுக்களாய் மீண்டும்
நான் இருப்பேன் இங்கே

அப்போதாவது நீ என்னைக் காதலி......

புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே
இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்
அப்போதாவது
நீ என்னைக் காதலி......

மன்னித்துவிடு.....

மன்னித்துவிடு.....
நான் உன்னை
மறக்க
மறந்துவிட்டேன்.....!

அன்பே!!!

என் தோள் மீது சாய்ந்து
என்றோ தோலைந்த காதலை
எண்ணி வாடுகிராயே!
இன்றும் உன் அருகில்
தோலையாத காதலுடன்
காத்திருக்கும் என் கண்கள்
தெரிய வில்லையா?????

கேட்டுப்பார் !!!!!!!!!!

என் நெஞ்சைக் கேட்டுப்பார்
உன் காதல் சொல்லுமே.
என் கண்ணீரைக் கேட்டுப்பார்
உன் காயம் சொல்லுமே

என் நிகழ்காலம்.

கடலோடு மழை வரும்
அது மழைக் காலம்
என் விழியோடு கண்ணீர் வரும்
அது உன் நினைவுக்காலம்
இதுவே என் நிகழ்காலம்.

கனவில் நீ..

கனவில் நீ..
வருவாய் என
கண் உறங்க ஆசைப்பட்டேன்.
தூக்கம் வரவில்லை.
உன் நினைவுகளால்..........!!

அன்பே !!

நான் உன் உயிரான நாள் முதல்
நான் உணர்கிரேன் காற்றில் மிதப்பதாய்!
என் எடை நான் உணராதது
என்னை நீ சுமப்பதாலா???

வலி

காலத்தின் கைகளில் உண்டாம்
வலி தனை போக்கும் மாத்திரை

புரிய வில்லை எனக்கு - என்
வலி இன்னும் என் மனதில்

வலிகளோடு வாழ்வது தான்
வாழ்க்கை என்றால்
எற்கத்தான்
வேண்டும் என்றால்
ஏற்று கொள்வேன் - உன்போல்
ஒரு கை அதை
துடைக்க வரும் போது

புரியாத உறவு
இது அறிந்தவர்கள்
புரிந்து கொள்வார்
வலிகளின் வேதனை
அது வலித்தவனுக்கு மட்டுமே
புரிந்து கொள்ளும்
புரிந்தவள் நீ என்பதாள்
கை கொடுத்தாய் - இன்று
கவி கொடுத்தாய்
தொலைத்தவிட மாட்டேன்
புரியாத உன் உறவை

இது வலிகள் தந்த
வார்த்தைகள் கற்பனைகளில்
வருவதில்லை புரிந்து கொள்......

இனியவளே!

இல்லாத கடவுள் போல
பொல்லாத இதயம் கொண்ட தோழியே!
என் மீது காதல் உண்டென்றால் உண்டு!
இல்லையென்றால் இல்லை!
என்பதை மட்டும் சொல்;
இரவு வெறுக்கும் சூரியனாக,
பனி வெறுக்கும் வெயிலாக,
என்னை வெறுத்து விடாதே!
உன் நினைவை சுமந்தபடி துடிக்கும்
இதயத்திற்கு நிரந்தர விடுமுறை அளிக்காதே!
ஒரே சமயத்தில் என்னை மனிதனாகவும்,
பைத்தியமாகவும் மாற்றியவளே!
என் காதலை அழிக்காதே...!

மறக்க வேண்டுமென்று.....

பாதி நேரம் உன்னை
மறக்க வேண்டுமென்று
நினைக்கிறேன்
மீதி நேரத்தில்
உன்னை மறக்க முடியாமல்................

மழை போல தான் நீயும்....

மழை போல தான் நீயும்
சில நேரம் தவிக்க விடுகிறாய்
சில நேரம் மூழ்கடிக்கிறாய்

உந்தன் பெயரை....

கவிதை வேண்டு மென பேனா தூக்கினேன்
கைகள் தானாய் கிறுக்கியது
உந்தன் பெயரை....

நினைவில் தீயாய் நீ....

நினைவில் தீயாய் நீ
உருகுகிறேன் நான் மெழுகாய்.....

எதிரினில் தெரிகிறாய்...

கண்ணை மூடும் போது
மட்டும் இல்லை
கண்ணை திறந்திருக்கும் போதும்
நீ மட்டும் தான்
எதிரினில் தெரிகிறாய்....

இது ஏனோ ?

இறக்கப் பிறந்த இதயம் ஏனோ
துடிக்கத் துடிக்கின்றது
உன்னைக் காணும் பொழுதுகளில்

உயிர்க்கத் துடிக்கும் இதயம் ஏனோ
துடிக்க மறுக்கின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

இமைக்க மறுக்கும்
விழிக(ளு)ள் சுமக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அழுது வடிக்க
அவையும் துடிக்கின்றன
உன்னைக் காணாத பொழுதுகளில்

இறக்கை முளைத்து
பறந்து வருகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

இறந்து பிறந்து
துடியாய் துடிக்கின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

வார்த்தைகள் வற்றிட
வறுமையில் தவிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

கண்ணதாசனை விஞ்சிடும்
கவிதைகள் கொட்டுதே
உன்னைக் காணாத பொழுதுகளில்

எதையோ சொல்லாது
ஏங்கியே நிற்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதனை வைத்தே
காவியம் வரைகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

ஆறடிச் சிலையொன்று
அசைவதாய் உணர்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

நூறடிச் சிற்பமாய்
நெஞ்சிலே கனக்கின்றாய்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சிரித்து நிற்பதை
பார்த்து ரசிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை நினைத்து நினைத்து
சிரித்தே அழுகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சொல்ல வந்ததை
சொல்லாது போகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை சொல்லிச் சொல்லியே
கண்ணாடி அழுகின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

ஏன் என் இதயம் உடைத்தாய் ? - WHY DID YOU BREAK MY HEART???

உன்னையே உயிராக
எண்ணிய என் மனம் தெளிந்துவிட்டது
இன்று உன் பொழுதுபோக்கிற்காகத்தான்
நீ காதல் எனும் நாடகம் ஆடினாய் என்று....
ஆனால்......

உன் நடிப்பால் ஏமாறிய என் இதயமோ
நான் சொல்லும் உண்மையை கேட்க மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம் தவிக்கிறது....
எனக்காக ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என் இதயத்திற்கு
நீயே சொல்லிவிடு
நீ என்னுடன் பழகியது
ஒரு பொய் நாடகமே என்று....
உன்னிடமும் என் இதயம்
ஒரு கேள்வி கேட்கிறது
நீ என்னை விரும்பாவிடிலும்
நான் உடைந்திருக்கமாட்டேன் இன்று....
ஆனால்....

நீ ஏன் விரும்புவது போல் நடித்து
ஏமாற்றி என்னை உடைத்தாய், வலிக்கிறது...
என் துடிப்பை மட்டும் இன்னும் ஏன்
நிறுத்தாமல் உன் மெளனத்தால்
வதைத்துக்கொண்டு இருக்கிறாய் ????

தடயம்....

நீ வந்து போன
தடமெல்லாம் அழிச்சிடத்தான்
நெனச்சிருந்தேன்...
நீ வந்த தடமிருக்கு...
போன தடமில்லையே...

ஒற்றைரோஜா

தரை தொடாத
விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...
அவள் கூந்தலில்
ஒற்றைரோஜா

என் காதல் சொல்ல நேரம் இல்லை

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே ...உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

ஏய் ஹாய் எ
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

சரணம் 1
காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்
ஹ்ம்ம் ..ஹீ

சரணம் 2

Thursday, April 1, 2010

பிரிதுயர்

வெட்டப்படாத நகங்களைப்போல உனது
நினைவுகள் அசௌகரியப்படுத்துகின்றன
குத்திக்கிழிக்க காத்திருப்பது போலவும்
வன்மம் கொண்டலைகின்றதது
ஒரு சிணுங்கள்கலோடு
ஒரு முத்தத்தோடு
ஒரு பொய்க்கிள்ளுதோடு
ஒற்றைப்புருவம் உயர்த்திய கோபத்தோடு
மென் மார்புகளின் வெம்மையோடு
இப்போதும் என்னுள் இருப்பதாய்
உணரும் ஒவ்வொரு கணத்திலும்
கசங்கிய புன்னகையை வலியுடன்
தவழவிடும் என் உதடுகளை
எதைக்கொண்டு மறைப்பது?



தேவை வதை......

தேவதைகள் என்னும் சொல்லை வடமொழிச் சொல்லென்று
பல நாட்கள் பயன்படுத்த தயங்கி
நின்றேன்.....

நீ பேசும் மொழியை கேட்ட
பின்தான்........தேவை வதை
என்று...உளறிக் கொண்டே
தேவதை என்ற தமிழ்ச்சொல்லை
கண்டுபிடித்தேன்...........

 

விண்ணை தாண்டி வருவாயா?

என் பிரிவுக்கும், தனித்த இரவுக்கும் பொருள்
கொடுத்த காதலை கொடுத்த நீ
என்னோடு இல்லை இன்று தோழி....

நான் கண்ட பொருளை, உனை கண் கொண்டு
கண்டு உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன்..
என்னை தாண்டி என்னுள் வந்த நீ
விண்ணை தாண்டி வருவாயா?

காதல் ஒரு வழி

கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது
உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள்
நீரால் மண்ணை தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பி செல்ல தனி வழி


நாளைக்கு நான் காண வருவாளோ.....

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்

எனது இரவு அவள......் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்கள்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ 
வழியோரம் விழி வைக்கிறேன்.......



விடியாத இரவு...

வேறென்ன செய்ய
இரவும் பகலும்
மாறி மாறி
உன்னை நினைவூட்ட..

நீ சிரித்த பொது அழகிய நிலவும்
தன்னை மறந்து
விழுந்து விடலாம்
சிவந்த உன் கன்னங்கள்
சூரிய குடும்பத்தில்
ஒரு கடைக்குட்டி போல...

நானோ உன் போல அல்ல
என்னிடம் அடிமைகள் என
எவரும் இல்லை
உன்னை போல...

சிதறிய நீர்த்துளிகளை போல
முத்துக்கள் பரப்பிய
உன் சிரிப்புகளாய்

உலகமே உன் கையில்
மையம் கொள்ள
நீயோ என் விழிகளுக்குள்
தங்கிக்கிடக்கிறாய்...

உன்னால் விடியாத இரவும்
விடிந்த பகலுமாய்
உலகமே உன்னைத்தேடி
அலையை
அவர்களிடம் பதில் கூற
என்னிடம் மொழி இல்லை...

கண்களை திறந்து
உன்னை தாரை வார்க்க
வழிகளும் இல்லை
உன்னை நான் சிறை வைக்க
என்னை நீ வாரி எடுத்து விட்டாய்
உன் மனச்சிறையில்...

வழிகளும் புரியவில்லை
வரிகளும் தெரியவில்லை
கால்கள் மறந்து என்னைத்தேட
உன் கண்கள் மட்டுமே என்
வழிகாட்டியானதே...




நிஜம் உந்தன் காதலென்றால்....

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித் தான்
தீக் குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வ...ொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்  
நிஜம் உந்தன் காதலென்றால்


புன்னகை..........

புரிந்து
கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தானாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை !!

முதல் முத்தம்.!
















மண்ணில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும்
முதல் முத்தமே…

அர்த்தம் புரிந்தவர்களுக்கு மட்டும்.


காதல் புன்னகை

ஒரு
பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.

அது
இரவை உடைக்கும்
ஓர்
மின்னல் கோடு போல
தூய்மையானது

தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.

எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர்
பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.

ஒரு மின்மினியை
ரசிக்கும்
இரவு நேர யாத்திரீகனாய்
உன்
புன்னகையை நேசிக்கிறேன்.

ஆதாமுக்கு
ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல
எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.

எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.

நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று.


நான் ஏன்...

காலம் காலமாய்..
இரவு பகலாய்...
பகலும் இரவுமாய்...
நிழலிலும் நிசத்திலும்...
இந்த பூவைப் போல்...
பூவை உனக்காக காத்திருக்கின்றேன்...

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு.....

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

என் சுவாசக்... காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் ...

மறக்கத் தெரியவில்லை எனது காதலை.....

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
சிறகுகள் முளைகும் முன்னே
சிறகினை பூட்டிக் கொண்டேன் என் தேவியே
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...

காதல் மலர்ச்செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னை சேராமல் உயிர் வாடி நின்றேன்
உனக்காக பாட இசை கொண்டு வந்தேன்
மெ...ளனங்கள் பரிசாகத் தந்தேன் ..

செந்தம் ஆகாது சொல்லாத நேசம்
இதயம் சேராது இல்லாத பாசம்...காதல் மகராணியே..
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...

உன்னை நினையாமல் ஒரு நாளும் இல்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தம் இல்லை...
கடல் நீலம் கூட கரைந்தோடி போகும்
என் அன்பில் மாற்றம் இல்லை..
தோகம் தீயோடு வாடும் போதும்
தாகம் என் தாகம் தீர்வதில்லை
ஆசை அழியாதடி

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
சிறகுகள் முளைகும் முன்னே
சிறகினை பூட்டிக் கொண்டேன் என் தேவியே

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?