Thursday, April 8, 2010

என் பிரிவையும் கொஞ்சம் நேசிப்பாயா..????

சத்தமில்லாமல்
என் இதயம் நுழைந்தாய்
நான் கண்ணிமைக்கும் நேரத்தில்
எனை கடந்து சென்று விட்டாய்

நீ வந்து போனதன் அடையாளமாய்
உடைந்து போன என் இதயத்துடன்
நான் மட்டும் இன்னமும் அங்கேயே
நின்றுகொண்டிருக்கிறேன்

கோபம் கூடக் கரைந்துபோகுமே
சில நாட்களில்…
என் மேல் நீ கொண்டிருப்பது
அந்த கோபத்தை விடக் கொடியதா ?

உன்னை மறந்துவிடுகிறேன் என
மறக்க நினைக்கிற
என் ஒவ்வொரு நொடியிலும்
நூறு முறை அதிகமாக
என் நினைவில் உயிர்க்கிறாய்

பிரிவு என்பதே
மீண்டும் உறவுக்காகத்தான்

உன் பிரிவின் வலியை கூட
சுகாமாகவே உணர்கிறேன்

என் பிரிவையும் கொஞ்சம்
நேசிப்பாயா..????

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?