Tuesday, April 6, 2010

இனியவளே!

இல்லாத கடவுள் போல
பொல்லாத இதயம் கொண்ட தோழியே!
என் மீது காதல் உண்டென்றால் உண்டு!
இல்லையென்றால் இல்லை!
என்பதை மட்டும் சொல்;
இரவு வெறுக்கும் சூரியனாக,
பனி வெறுக்கும் வெயிலாக,
என்னை வெறுத்து விடாதே!
உன் நினைவை சுமந்தபடி துடிக்கும்
இதயத்திற்கு நிரந்தர விடுமுறை அளிக்காதே!
ஒரே சமயத்தில் என்னை மனிதனாகவும்,
பைத்தியமாகவும் மாற்றியவளே!
என் காதலை அழிக்காதே...!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?