என் கவிதையின்
கருவானவள் - அவள்
என் வரிகளின்
உருவானவள் – அவள்
என் மகிழ்ச்சியின்
பிறந்தநாள் – அவள்
என் பகலின்
விழிப்பானவள் – அவள்
என் இரவின்
உறக்கமானவள் – அவள்
என் விழியின்
ஒளியானவள் – அவள்
என் நினைவின்
நிஜமானவள் – அவள்
என் உயிரின்
துடிப்பானவள் – அவள்
என் இதயத்தின்
வாசமானவள் – அவள்
இன்று இல்லை
என்வசம் – அவள்
No comments:
Post a Comment