Thursday, April 8, 2010

தொலைவினில் நீ இருந்தாலும்!!!

இமை பொழுது மட்டுமே
உன்னை மறக்க நினைத்தால்
கோடி முறை உதிக்கிறாய் என்னில்

உன்னை பிரிய நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
ஓர் உயிர் பிரியும் வலி என்னில்

உன் ஒரு நொடி
மௌனத்தைக் கூட
என்னால் தாங்க முடியவில்லை

இனி நீ இல்லாத என் நாட்களை
எப்படி என் இதயம் தாங்கும்?

உன் தொலைவினில் நான் இருந்தாலும்
என் அருகினில்தான் நீ என்றும்

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?