Friday, April 9, 2010

நான் மறக்கவில்லை..........

மறக்கவே முடியவில்லை
உன்னை சந்தித்தபின்
உன்னுடன் சேர்ந்து வலம் வந்த
அந்த இனிய நாட்களை

என் உள்ளத்தின்
உள்ளில் பொங்கியெழும்
உன் நினைவுகளை மட்டுமே
நினைத்துக்கொண்டு
என் நாட்களை
நான் கடந்துவருகிறேன்

உன் நினைவுகளால்
என் இதயம் நிறைந்த
அந்த அழகான நாட்களை
கவிதையாக எழுதிட
இன்னமும் வார்த்தைகளை
தேடிக் கொண்டிருக்கிறேன்
வழிந்தோடும் என் கண்ணீருடன்..!!!
நம் நினைவுகளை
கடந்து வந்த
அந்த வசந்த நாட்களை
நான் மறக்கவில்லை
மறக்கவும் முயல்வதில்லை....

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?