Thursday, April 8, 2010

கனவாகிடக் கூடாதா?

என்னால்
நினைத்து பார்க்க முடியவில்லை
நீயில்லாமல் நான் சந்திக்கும்
இந்த துயர நாட்களை

ஒரு சில நாட்கள் தான்
உன்னுடன் பேசவில்லை
இதர நாட்களில்
நாம் பேசவில்லையே என்ற
என் தயக்கமே
இந்த இடைவெளிக்கு
காரணமாகிவிட்டது

இன்று என்
ஒவ்வொரு நொடியிலும்
அதற்க்கான விளக்கம்
அளித்துக் கொண்டிருக்கிறேன்
நீ கேட்கப் போவதில்லை
என்று தெரிந்தும்

நீ என்னுடன்
இருக்கும் வரை
என்னை விட்டு உன்னால்
எங்கே சென்று விடமுடியும்
என்ற என் நம்பிக்கையின்
அலட்சியமாக இருந்தேன்

இன்று
என்னிடமே நீ சொல்லாமல்
சென்று விட்ட பிறகுதான்
காலம் கடந்துவிட்டதை
அறிந்து துடிக்கிறேன்

நான் காணாத
ஓர் கனவாகிடக் கூடாதா?
நீ என்னைக் கடந்து போனது..!!!!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?