Sunday, November 6, 2011

காதல் தோல்வி!!!!!!


அடிக்கடி போட்டிவரும்
நமக்குள்
யார் அதிகமாய் காதலிப்பவர் என்று...
ஒவ்வொரு முறையும்
தோற்கிறேன் நான் உன்னிடம்
உனக்கான காதலோடு.

:::என் உயிரை விட்டுவிட தயங்குகிரேன்:::

ஒவ்வொரு நொடியும்
உன்னை மட்டுமே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒரே உயிர் நானடி!!!
அதனால்தான்
நீ இல்லா இந்த கொடுமையான நொடிகளிலும்
என் உயிரை விட்டுவிட தயங்குகிரேன்...

Saturday, June 25, 2011

குடையிருந்தும் நனைகிறேன்....

















என் காதலை
உதறி சென்ற உன்னை
நினைக்கும் போது
குடையிருந்தும் நனைகிறேன்
கண்ணீரால்!

காயம்பட்ட
என் இதயத்தின் பிம்பத்தில்
எதிர்ப்படும் உருவமெல்லாம்
உன் உருவமாகவே
வந்து காட்சியளிக்கிறது!

நிலத்தில் சிதறிய
தண்ணீரில் தான்
என்னைப் போல,
எத்தனை பேரின்
கண்ணீரும் கலந்திருக்குமோ!

கண்ணீர் மழையில்


உன்னைத் தொட‌முடியாம‌ல்
துடிதுடிக்கும் வான‌த்தின்
கண்ணீர் மழையில்
நானும் நனைகிறேன்
என் கண்ணீர்த்துளிகளை
மறைத்தபடி...

Tuesday, April 26, 2011

நீ அங்கு இருக்க.. நான் இங்கு தவிக்க..


















நீ அங்கு இருக்க.. நான் இங்கு தவிக்க..
நமக்காக சுருங்காதோ.. இந்த நீண்ட பாதை..?

வழித்துணை நீ என்றாய்..
- வலி என் உள்ளே..
- துணை மட்டும் இல்லையடா என் முன்னே..!

இரு கையில் மருதாணி அணிந்தாலும்..
உன்னை அணைக்கையில்.. அழியாத
வரம் கேட்டேன்…! நிஜத்தில் மருதாணி அழியா இருக்க…
நினைவில் அணைப்பது நியாயமா?..

பொறுமை என்னும் தீயில் எரியதானோ
பெண்ணாய் பிறந்தேனோ..?…

அடக்கம் ஒழுக்கம் என்ற கட்டுபடினுள் என்னை அடக்கலாம்..
பெண் ஆசை அடங்குமா?…

தீராத மோகம்… என் உள்ளே..
தீர்த்தம் போல.. வரம் தந்தாய்..

நினைவில் வாழும் சுகத்தை தந்தவனே…
நிஜத்தில்.. ஏனோ சலனம் தந்தாய்…

பிரிவு… வெகு விரைவில் குறைந்தாலும்..
பிரிவால்.. நாம் பிரிந்ததை எண்ணி..
பிரிவு கூட கதற வேண்டுமடா ..
பிரித்து விட்டேனே என்று….!

நீண்ட கவிதைகள் என்று, புறம் தள்ளி விடாதீர்,..!!!!
















அன்று நான் தொலைத்த என் கவிதைக்கட்டிற்காய்,
இன்று வரை நான் கவலைப்பபட்டதுண்டு,
அன்று வி்டிருந்தால் என் இளைய தளம்,
என்றோ காதல் தளம் ஆகியிருக்கும்.
எனிலும் சந்தோஷப்படுகிறது என் மூலதனம்,
மட்டும் எப்போதும் என்னிடம்,


என்றும் ஒட்டியே இருப்பதால்.
இதுவும் காதலுக்காக தான்,
ஆனாலும் கொஞ்சம் வித்தியாசம்,
சகோதர காதலுக்காய்(பாசம்)
இது என் கல்வியறை காத்திருக்கிறது,
௨ன் கண்களையும் காதலையும் திறக்க,
நீண்ட கவிதைகள் என்று,
புறம் தள்ளி விடாதீர்,
ஒரு வரிகளில் சுருக்கி எழுதி,
பெருக்கிக் கொள்ள விரும்பவில்லை,
என் நேரத்தை.
என் ௨றவுகளு்கு கொடுப்பதற்கு,
என்னிடம் ஒன்றுமே இல்லை,
என் கவிதைகளைத் தவிர.
முன்பெல்லாம் கண்மூடும் வரை கவிதைகள்;
கிறுக்குகின்றது என் கைவிரல்கள்…!
நடு இரவினிலே,
இதயம் மட்டும் தூங்காமல் இருப்பதால்..
இன்றோ..,
விடிய விடிய கவிதைகள் எழுத விரும்புகிறது;

“நீ கூறியவை”

என் கண்கள் அழகு என்று யார் சொன்னது?
என் கூந்தல் அழகு என்று யார் சொன்னது?
என் ௨தடு அழகு என்று யார் சொன்னது?
நானே அழகு தான் நீ அருகில் இருந்தால் மட்டும்..!

Sunday, February 27, 2011

நேற்று இறந்து விட்டேன் ......

சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....


அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?


நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.


எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?


என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?


என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.


எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.


உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...

என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.

மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...

அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.

தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...

உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.

என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.

யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.

என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்..
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?

நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..

வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?

என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?

வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?

எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.

என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்.

அதை மட்டும் திருப்பிக்கொடு ......

ஒவ்வொரு முறையும்
மறக்கத்தான் நினைக்கிறேன்
கன்னங்களில் வழியும் கண்ணீரை
துடைத்த பின்…

காதலை எந்த
வடிவில் கண்டாலும்
மறுபடியும் கண்ணீர்
வருவதை ஏன் என்னால்
தடுக்க முடிவதில்லை?

மெமரி கார்டில்
என்னை அழித்துவிட்டாய்
என் மெமரியை
என்ன செய்ய முடிந்தது உன்னால்?

யாருக்கெல்லாமோ கால் செய்தேன்
உனக்கு மட்டுமே காதல் செய்தேன்.
கால் கொண்டு எட்டி உதைத்தாய்
அட, எட்டி உதைத்தாலும்
உன்னிலே ஒட்டிக்கொள்ளும்
ஒட்டுண்ணியாய்
வேடிக்கை காட்டுகிறது பார் என் காதல்.

நீ வாழ தொடங்கிவிட்டாய்
உன் வாழ்க்கையை..
அதில் தவறேதும் இல்லை
என் வாழ்க்கையையை
ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?

எடுத்துக்கொள் என்று
இயல்பாக சொல்கிறாய்.
வர மாட்டேன் என
அடம்பிடிக்கும் இதயத்தை
சிலுவையிலா அறைய முடியும்?

அதுவும் சரிதான்.
நேற்று என் இதயத்தை
சிறையில் வைத்தாய்
இன்று சிலுவையில்....

எப்போதும் இல்லாமல்
விழித்திரை இப்போதெல்லாம்
அதிகநேரம் வேலை செய்கிறது.
தூக்கத்தை விடவும்
துடிப்பதைதான் அவைகள் அதிகம்
விரும்புகின்றன போலும்.

கண்ணில் விழுந்த தூசியை
முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.
இப்போதெல்லாம் ஊசி கொண்டு
எடுக்கிறாய்..

உணவைக்கூட
இதழிலிருந்து இதழிற்கு
தடம் மாற்றினாய்.
ஏன் உணர்வை மட்டும்
மறுத்து விட்டாய்?

எத்தனை காதல் கடந்து வந்தாலும்
உன் இதயம் மட்டும்தான்
என் காதலுக்கான தாஜ்மகால்.

அங்கே எனக்கு
பள்ளியறை வேண்டாம்
கல்லறையாவது
கட்டிக்கொள்ள அனுமதி கொடு

இறக்கவும் விடவில்லை
இருக்கவும் விடவில்லை
என்னதான் வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?

நான் கொடுத்த எல்லாவற்றையும்
திருப்பி கொடுத்தாய்...

ஒன்றைத்தவிர..
அதை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்துவிடு.
 
திருப்பிக்கூட தரவேண்டாம்
ஒரே ஒரு முறை
கண்ணிலாவது காட்டிப்போ..
நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..
ஆம். அனைவரும்
என்னிடம் கேட்கிறார்கள்.

தயவுசெய்து
தவணை முறையிலாவது
எனக்கு காட்டு

என் சிரிப்பை..

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?