Tuesday, April 26, 2011

நீ அங்கு இருக்க.. நான் இங்கு தவிக்க..


















நீ அங்கு இருக்க.. நான் இங்கு தவிக்க..
நமக்காக சுருங்காதோ.. இந்த நீண்ட பாதை..?

வழித்துணை நீ என்றாய்..
- வலி என் உள்ளே..
- துணை மட்டும் இல்லையடா என் முன்னே..!

இரு கையில் மருதாணி அணிந்தாலும்..
உன்னை அணைக்கையில்.. அழியாத
வரம் கேட்டேன்…! நிஜத்தில் மருதாணி அழியா இருக்க…
நினைவில் அணைப்பது நியாயமா?..

பொறுமை என்னும் தீயில் எரியதானோ
பெண்ணாய் பிறந்தேனோ..?…

அடக்கம் ஒழுக்கம் என்ற கட்டுபடினுள் என்னை அடக்கலாம்..
பெண் ஆசை அடங்குமா?…

தீராத மோகம்… என் உள்ளே..
தீர்த்தம் போல.. வரம் தந்தாய்..

நினைவில் வாழும் சுகத்தை தந்தவனே…
நிஜத்தில்.. ஏனோ சலனம் தந்தாய்…

பிரிவு… வெகு விரைவில் குறைந்தாலும்..
பிரிவால்.. நாம் பிரிந்ததை எண்ணி..
பிரிவு கூட கதற வேண்டுமடா ..
பிரித்து விட்டேனே என்று….!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?