Thursday, April 8, 2010

நீ தெரிந்துகொள்வாய்…!!!

ஓர் அதிகாலையின்
அமைதியில்
சின்ன சின்ன
சண்டையுடன்தான்
ஆரம்பமானது
உனக்கும் எனக்குமான
பெயரிடப்படாத நம் உறவு

உன் ஒவ்வொரு
அசைவுகளையும்
என்னுடன் நீ
பகிர்ந்து கொண்டாய்

உன் நிகரில்லா
அன்பை தந்து
என்னில் உன்னை
உணர வைத்தாய்

உன் ஒவ்வொரு
வார்த்தையிலும்
உன் ஒவ்வொரு
நாளிலும்
உன் ஒவ்வொரு
நொடியிலும்
உன்னுடன் நான்
வாழ்ந்து இருக்கிறேன்

என்னிடம் இருந்த
நீ இன்றும்
அப்படியேதான் இருக்கிறாய்

என்னில் பாதியாக
என் இதயத்தின் பாதியாக
என் உயிரில் பாதியாக
இன்றும் நீயே!!!

என் நாட்களின்
ஒவ்வொரு விடியலிலும்
உன் வரவுக்காக
நான் காத்திருக்கிறேன்

நீயில்லாத
என் ஒவ்வொரு நொடியும்
எனக்கு கடினமாகவே
கரைகிறது

உன்னால் மௌனமாக
தொலைக்கபட்ட
அந்நாட்களை
நீ நினைத்துபார்

தெரிந்துகொள்வாய்
என் உயிரின் பாதியாக
இருந்த உன்னை !!!!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?