Friday, April 9, 2010

உயிர் அழும் ஓசை

உன்
முகம் காண
ஆண்டுகளாகக் காத்திருந்தேன்

நீயோ
என் கண்களில்
உன் பிரிவின் கண்ணீரை
தந்து விட்டு
என் கண் மறைவாய்
சென்று விட்டாய்

ஆயிரம் சொந்தங்கள்
என்னுடன் இருந்தும்
நீ இல்லாத் தனிமையில்
உயிர் தவிக்கிறேன்

என் உயிர் அழும் ஓசை
உனக்கு
கேட்கவில்லையா ?

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?