Thursday, April 8, 2010

உன் நினைவுகளுடனே..!!

என் இதய சுவரில்
உன் அன்பால்
நான் எழுதிய
அழகிய கவிதையே

என் நொடிகள்
தோறும் என்னில்
உதிக்கும்
உன் நினைவுகளை

உன்னை நினைக்கும்
என் தவிப்புகளை
உன்னிடம்
சொல்ல துடிக்கிறேன்
நான் எப்படி
உணர்த்துவேன்
நீ எப்படி உணர்ந்து
கொள்ள போகிறாய்?

நீ ஏன்
என் இதயத்தில்
விழுந்தாய்?
மனமுடைந்து போகிறேன்

என் நினைவுகள்
எல்லாம்
உன்னையே தேடுகிறது

உன் பிரிவை எண்ணி
தினமும் தவிக்கிறேன்

உன்னை தேடியே
என் நினைவுகள்
கரைந்து கொண்டிருக்கிறது

உன் வருகைக்காக
நான் காத்திருக்கிறேன்

உன்
நினைவுகளுடனே
நான் இன்றும்
வாழ்ந்து வருகிறேன்

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?