Monday, January 18, 2010

உள்ளங்கையில் நிழற்படமாய் நீ...!

நம்மிருவரின் அன்பை
மொத்தமாய் வெளிக்காட்டிய
அந்த ஒருசில நிமிடங்களின்
முத்தபரிமாற்ற பரிவர்த்தனையை
வெட்ட வெளிச்சமாய்
என்னுள் படம்பிடித்து காட்டுகிறது
குளித்துத் துவட்டிய பின்னும்
உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும்
ஓரிரு நீர்த்துளியையொத்த
உன் நினைவுகளை
தேக்கிவைத்திருக்கிறேன்
உள்ளங்கையில்
நிழற்படமாய் நீ...!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?