நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கோ ஒரு மூலையிலிருந்து நீ
என்னை நேசித்தாய்…..
என்றாவது ஒரு நாள்
நீயும் என்னை
வெறுப்பதாய் இருந்தால்
அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை……
சொல்லி விட போகிறேன்...
ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும்
உன் ஓரப் பார்வையும்..
கண்கள் கொண்டு நீ புரியும்
காதல் போரும்...
காயம்பட்டு வீழ்ந்து கிடக்கிறேன்.
மரணம் கூட பழகலாம் போல...
மன'ரணம்'..... கடினமாயிருக்கிறது.
மௌனம் உணர மறுக்கும் உனக்கு...
வார்த்தைகள் கொண்டே
சொல்லி விட போகிறேன்...
உனக்கான என் காதலை...
என்னோடு நீயிருந்தால்
வானம் கூட என் கைவசம்.....
என்னை விட்டு
நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்துடும்......
உன் பெயரை உச்சரித்தே
நிதமும் வாழ்கிறேன் .......
அன்பே
உன் சுவாசத்தில் மட்டுமே
நான் வாசம் செய்வேன் ..........!!!!!
காதல் வழியும் கண்களை
சிதைக்கும் புன்னகையை
உயிர் தொடும் விரல்களை
தூக்கம் பறிக்கும் குரலை
நிலை தடுமாற வைக்கும்
எல்லாம் மறந்து விடுகிறேன் என்னை
மட்டும் திருப்பித்தந்து விடு
நான் நானாக இல்லை...
சிலவேளைகளில்
உன் வாழ்கையில் ஒருத்தர் இருக்கலாம் - அல்லது
உன் இதயத்தில் ஒருத்தர் இருக்கலாம் - அல்லது
உன் கனவு உலகில் ஒருத்தர் இருக்கலாம் -ஆனால்
நானும் உன்னுடைய ஒருத்தன் தான்! ...
உனகென்று எவரும் இல்லாதபோது.........
என்னைப் போல் எந்நேரமும்...
நீ என்னை நினைக்காவிட்டாலும்......
என்றாவது, ஒரு நாள்....
நீ...
என்னை...நினைப்பாய் பெண்ணே .....
அந்நேரம் நான் உன்னை.நினைப்பேனா..... என,
நீ.... நினைப்பாய்...
இதுவே ......நீ....
சொல்வதற்கு இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை
வாழ்வதற்கு என்னிடம்
வாழ்க்கை இல்லை
முடிக்கொண்ட உன் இதயத்தின் சாவி
என்னிடத்தில் இல்லை
என்
மெளனம் சொல்ல மறந்த காதலை
ஒரு வேளை என் மரணம் சொல்லக்கூடும்!
கசந்து போன என்
உன் நினைவுகளுடன்
கழிந்து சென்று கொண்டு இருக்கும்
நிமிடங்களுக்குள் .....
தேன்வார்த்து செல்கின்றது
சில மணித்துளிகளே என்றாலும்
உன் குரல்......
உன்னால்
உதாசின படுத்தப்பட்ட
என் அன்புக்கு இன்று
ஒரு வயது பூர்த்தி ஆகிறது.....
உன்னால் கொல்லபட்ட
என் உணர்வுகளும்
உன்னால் என் மனம் என்னும்
கல்லறையில் உயிர் ஓடு புதைக்கபட்ட
என் இதயமும் அதனுள் அடைக்கபட்ட
என் உன் நினைவுகளும்....
உயிர் அற்று வாழும் என்
உடலுக்கு வாழ்த்து சொல்லி செல்கின்றன...
எனக்ககா என் கண்கள்
ஒரு துளி கண்ணீர் சிந்த துடித்தாலும்..
அந்த ஒரு துளியினால்
உன்னேக்கேதும் ஆகிடுமோ என்ற பயத்தில்
என் கன்னத்தோடு நிறுத்தி விட்டன.........
உன்னால் சிதைக்கபட்ட கனவுகளுடன் நான் ......
நிலவும், சூரியனும் தூரத்திலிருந்தும்
என்னருகில் நீயிருப்பதால் தான்
அவர்களும் அருகிருந்து
ஒளிர்வது போல் தெரிகிறார்கள்....
சூரியனுக்கும், சந்திரனுக்கும்
ஒளி கொடுப்பது
உன் முகம் தானோ?....
என் மரண வீட்டுக்கு
வர வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட
உங்களைப் பார்த்து
புன்னகைக்க முயற்சிக்கிறேன்!
நீங்கள் நிற்பது பற்றியும்
இருப்பது பற்றியும்
இன்னும் முடிவெடுக்கவில்லை
என்பது புரிகிறது!
நானும் தான்!
உங்களை வரவேற்பது குறித்து
சொல்லிவிட மறந்துவிட்டேன்;
இப்போதும் தாமதமாகவில்லை!
ஆனால் பூக்களின் மென்மையும்
மெத்தையின் சுகமும்
தடுத்துக் கொண்டிருக்கின்றன
எழும்புவதிலிருந்து;
முதன் முறையாக
அனுபவிப்பதால் இருக்கும்!
மன்னித்துவிடுங்கள்;
நாளை உங்களின் விமர்சனம்
இதைத் தவிர்த்து
வெளி வரட்டும்!
உச்சத்தில் அழும்
அவள் குறித்து
எனக்கு எந்தவித
பிரக்ஞைகளும் இல்லை;
என் அம்மாவாக இருக்கலாம்
நீங்கள் யோசிக்காதீர்கள்!
ஒரு கிழமை அதிகம்;
பிறகு சாப்பிடத்தான் வேண்டும்!
உங்கள் விசயத்துக்கு வருவோம்;
நீங்களும் பாவம்;
கறுப்பு ஆடைக்கும்
கொத்துப் பூவுக்கும்
அவகாசமில்லாமல்
அவதிப்படலாயிற்று!
கூடவே கண்ணீருக்கும்;
நீங்கள் எங்கே தான்
போவீர்கள்;
நேற்றைய எனக்கும்
இன்றைய உடலுக்கும்
அடையாளங் கண்டு தோற்று
பிதற்றத் தொடங்கியிருக்கிறீர்கள்;
"நல்ல ஆத்மா"
சிரிப்பு வருகிறது!
உதடுகள் அசைவதை
நீங்கள் கவனிக்கவில்லை
என்னை புறக்கணிப்பது
எப்போதும் இலகுவாக இருக்கிறது
உங்களுக்கு!
உங்கள் கண்ணீரின் ஈரம்
சீக்கிரம் காய்வது குறித்து
விசனமுறத் தொடங்கியிருக்கிறீர்கள்!
இதற்கும் ஒரு விதி
நேற்றே செய்திருக்கலாம் என்று
நீங்கள் யோசிப்பது புரிகிறது;
எனக்கெங்கே தெரியும்
இன்று இங்கே கிடப்பேனென்று
எல்லோரும் இதைத்தானே
இலகுவாக மறக்கிறோம்!
நான் உங்களுக்கு
என்ன செய்திருக்கிறேன்
என்பது நினைவிலில்லை;
நான் இந்த சமூகத்தில்
பிறப்பிக்கப்பட்டவள்!
விதிகளால் வளர்க்கப்பட்டவள்!
தீயதை நினைவுபடுத்துதல்
அந்த ஆயிரங்களில் ஒன்று!
சரி விடுங்கள்!
உங்களை நினைவுபடுத்தலாம்!
மூலையில் நிற்பவளுக்கும்
எனக்குமான வஞ்சம்
தீர்க்கப்படாது கிடக்கிறது!
ஆசைப் புதைகுழியில்
அமிழ்த்தப்பட்டு நிற்கிறது
பகிரப்பட்ட அன்பு!
ஈரமான காதல் கனவுகளுடன்
அங்கேயே திரிகிறது மனது!
ஏதோவொன்றுக்கான ஆதங்கத்தில்
எறியப்பட்டுக் கிடக்கிறது உயிர்!
அதோ! அந்தரத்தில்!
கடக்கப்பட்ட தருணங்களின்
கழிவுகளில் தொலைந்த
பாதி வாழ்க்கை
எரிந்து கொண்டிருக்கிறது
இதோ! இங்கே!
சாம்பலுடன்;
சாம்பிராணிக் குச்சி!
நான் போகவேண்டும்;
இப்போது!
எங்கேயோ!
உங்கள் அரிதாரத்தை
இங்கே வீணாக்காதீர்கள்!
நாளை நான் மீளப்
பிறக்கப் போவதில்லை!
வாழ்க்கை இனியில்லை!
இதற்குப் பிறகில்லை!
மறக்கவே முடியவில்லை
உன்னை சந்தித்தபின்
உன்னுடன் சேர்ந்து வலம் வந்த
அந்த இனிய நாட்களை
என் உள்ளத்தின்
உள்ளில் பொங்கியெழும்
உன் நினைவுகளை மட்டுமே
நினைத்துக்கொண்டு
என் நாட்களை
நான் கடந்துவருகிறேன்
உன் நினைவுகளால்
என் இதயம் நிறைந்த
அந்த அழகான நாட்களை
கவிதையாக எழுதிட
இன்னமும் வார்த்தைகளை
தேடிக் கொண்டிருக்கிறேன்
வழிந்தோடும் என் கண்ணீருடன்..!!!
நம் நினைவுகளை
கடந்து வந்த
அந்த வசந்த நாட்களை
நான் மறக்கவில்லை
மறக்கவும் முயல்வதில்லை....
என் நெஞ்சில் அமைதில்லை
உன் நெஞ்சில் இரக்கமில்லை
என் கண்ணில் நீர் இல்லை
உன் கண்ணில் இரக்கமில்லை
தேடி தேடி களைத்துவிட்டேன்
தேடவிட்டு தவிக்கவிடடாய்,பாவி
நான் உனக்கு செய்த பாவம் தான் என்ன,
பார முகமாய் நீ இருக்க காரணம் தான் என்ன,
கவி கொண்டு வர கண்ணதாசன தான் இல்லை ,
தூதுவிட இரவு சூரியனும் இல்லை..........
என்னுள் காதலெனும்
செடியை நட்டாய்
இன்று மரமாகி நிற்கும் நாம் காதலை
விட்டுப்பிரிய நினைக்கும்
உன்னைத் திட்டக் கூட
மனமில்லாமல் தவிக்கிறேன்
நான் வாடி மடிந்தாலும்…
நீ வாழ்க என்று….!
நாம் ஒன்றாய் கழித்த அந்த
நினைவுகளை என்
இதயத்தில் செதுக்கி விட்டேன்
என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரிந்து
செல்ல நினைக்காதே……
நானில்லாமல் நீயிருப்பாய்………
ஆனால்…..
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….!
உணர்வுகளை உண்மைகளை
உரைக்க முடியவில்லை.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லமுடியவில்லை.
சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவே முடியவில்லை.
வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
வார்த்தைகளை என்னால்
பிரசவிக்கவே முடியவில்லை.
ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
நிறைந்து வழிகின்றன.
ஆனால் நான் ஊமையில்லை.
என்னால் நன்றாக பேசமுடியும்
இருந்தும் என்னால் பேச முடியவில்லை.
ஏன்?
நான் பூரணமடையாதவனா?
இல்லை குறைபாடு உடையவனா?
என்னுள் மட்டுமே என்னால்
இன்னும் கேட்க முடிகிறது.அப்போதும்
வார்த்தைகள் வெளியே வரவேயில்லை.
ஆனால் பேசுகின்றேன்
நிறையவே பேசுகின்றேன்
வாய் இருந்தும் ஊமையாய்.
என் காதலை உன்னிடம் சொல்ல தயங்குகிறேன் உயிரே!
காரணம்; உனது அப்பா, அம்மா மற்றும் உனது உறவினர்களுக்கு பயந்தல்ல!!!
நீ என் காதலை மெளனம்மாக்கிவிடுவாயோ என்றுதான்!!!
ஆனால் மெளனமாக இருக்கவும் முடியவில்லை!
காரணம்; கடைசிவரையிலும் என் காதலை உன்னிடம் சொல்லாமல் போய்விடுவேனோ என்றுதான்!!!
அதனால்தான் சொல்லாமல் சொன்னேன் என் காதலை உன்னிடம்!
ஆனால் நீயோ என் காதலை புரிந்தும் புரியாமல் இருந்துவிட்டாயே உயிரே!
அதர்க்கு காரணம் என்ன???
இந்த உலகத்தில்
எத்தனையோ பேர் கடவுளின்
அவதாரமாகப் பிறந்ததாக
இலக்கியங்கள் சொல்கின்றன
ஆனால் நீ ஒருத்திதான்
அவர்களையும் தாண்டி
காதலின் காதலின் அவதாரமாகப் பிறந்தவள்………
கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே
காந்தப் பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே
தவறு நான் செய்யவில்லை
தண்டனை நீ தருகின்றாய்
சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து நீ போகின்றாய்
ஊமைக் குயிலடி நான்
உள்ளுக்குள் அழுகின்றேன்
ஓரிரு வார்த்தைளோ
மெல்ல மெல்ல கொல்லுதடி
என்
உதிரத்தால் எழுதி வைக்கும்
உண்மையடி பெண்ணே
நீ போகுமிடமெங்கும்
பாதி உயிரோடும்
என் பயணம் தொடரும்
புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே
இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்
அப்போதாவது
நீ என்னைக் காதலி.
புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே
இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்
அப்போதாவது
நீ என்னைக் காதலி......
காலத்தின் கைகளில் உண்டாம்
வலி தனை போக்கும் மாத்திரை
புரிய வில்லை எனக்கு - என்
வலி இன்னும் என் மனதில்
வலிகளோடு வாழ்வது தான்
வாழ்க்கை என்றால்
எற்கத்தான்
வேண்டும் என்றால்
ஏற்று கொள்வேன் - உன்போல்
ஒரு கை அதை
துடைக்க வரும் போது
புரியாத உறவு
இது அறிந்தவர்கள்
புரிந்து கொள்வார்
வலிகளின் வேதனை
அது வலித்தவனுக்கு மட்டுமே
புரிந்து கொள்ளும்
புரிந்தவள் நீ என்பதாள்
கை கொடுத்தாய் - இன்று
கவி கொடுத்தாய்
தொலைத்தவிட மாட்டேன்
புரியாத உன் உறவை
இது வலிகள் தந்த
வார்த்தைகள் கற்பனைகளில்
வருவதில்லை புரிந்து கொள்......
இல்லாத கடவுள் போல
பொல்லாத இதயம் கொண்ட தோழியே!
என் மீது காதல் உண்டென்றால் உண்டு!
இல்லையென்றால் இல்லை!
என்பதை மட்டும் சொல்;
இரவு வெறுக்கும் சூரியனாக,
பனி வெறுக்கும் வெயிலாக,
என்னை வெறுத்து விடாதே!
உன் நினைவை சுமந்தபடி துடிக்கும்
இதயத்திற்கு நிரந்தர விடுமுறை அளிக்காதே!
ஒரே சமயத்தில் என்னை மனிதனாகவும்,
பைத்தியமாகவும் மாற்றியவளே!
என் காதலை அழிக்காதே...!
உன்னையே உயிராக
எண்ணிய என் மனம் தெளிந்துவிட்டது
இன்று உன் பொழுதுபோக்கிற்காகத்தான்
நீ காதல் எனும் நாடகம் ஆடினாய் என்று....
ஆனால்......
உன் நடிப்பால் ஏமாறிய என் இதயமோ
நான் சொல்லும் உண்மையை கேட்க மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம் தவிக்கிறது....
எனக்காக ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என் இதயத்திற்கு
நீயே சொல்லிவிடு
நீ என்னுடன் பழகியது
ஒரு பொய் நாடகமே என்று....
உன்னிடமும் என் இதயம்
ஒரு கேள்வி கேட்கிறது
நீ என்னை விரும்பாவிடிலும்
நான் உடைந்திருக்கமாட்டேன் இன்று....
ஆனால்....
நீ ஏன் விரும்புவது போல் நடித்து
ஏமாற்றி என்னை உடைத்தாய், வலிக்கிறது...
என் துடிப்பை மட்டும் இன்னும் ஏன்
நிறுத்தாமல் உன் மெளனத்தால்
வதைத்துக்கொண்டு இருக்கிறாய் ????
கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது
உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள்
நீரால் மண்ணை தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பி செல்ல தனி வழி
பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்
எனது இரவு அவள......் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்கள்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ வழியோரம் விழி வைக்கிறேன்.......
ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித் தான்
தீக் குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வ...ொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதலென்றால்
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
என் சுவாசக்... காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
சிறகுகள் முளைகும் முன்னே
சிறகினை பூட்டிக் கொண்டேன் என் தேவியே
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
காதல் மலர்ச்செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னை சேராமல் உயிர் வாடி நின்றேன்
உனக்காக பாட இசை கொண்டு வந்தேன்
மெ...ளனங்கள் பரிசாகத் தந்தேன் ..
செந்தம் ஆகாது சொல்லாத நேசம்
இதயம் சேராது இல்லாத பாசம்...காதல் மகராணியே..
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
உன்னை நினையாமல் ஒரு நாளும் இல்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தம் இல்லை...
கடல் நீலம் கூட கரைந்தோடி போகும்
என் அன்பில் மாற்றம் இல்லை..
தோகம் தீயோடு வாடும் போதும்
தாகம் என் தாகம் தீர்வதில்லை
ஆசை அழியாதடி
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
சிறகுகள் முளைகும் முன்னே
சிறகினை பூட்டிக் கொண்டேன் என் தேவியே
நீ விரும்பும் இதயம்
ஒரு நாள் உன்னை
தவிக்கவிட்டு செல்லும்
போது நினைத்துக்கொள்....
உன்னை விரும்பிய ஒரு
இதயத்தை நீ "என்றோ"
தவிக்க விட்டு இருக்கிறாய் என்று...........
என் விழியோரம் ஒரு நிழல்
என்கேயோ பார்த்த ஞாபகம்..
என் செவியோரம் ஒரு குரல்
எப்போதோ கேட்ட ஞாபகம்..
என் இதழோரம் ஒரு சுவை
எதையோ சுவைத்த ஞாபகம்..
என் மனதோரம் ஒரு சாரல்
எப்படியோ நனைந்த ஞாபகம்.. ஓ.!
இப்போதுதான் புரிகின்றது!!
முற்பிறவியில்(லும்) நீதான்
என் வாழ்க்கைதுணை என்று
உனது கண்கள் கலங்கிய பின்பு தான்...
எனது கண்களில் தூசி விழுந்து
இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன்.....
என்ன ஆனாலும் கண்கலங்கேன்....
கண்களுக்குள் இருக்கும் நீ கரைந்து விட மாட்டாயா?
உன்னோடு நடைபயில,
உன் தோளில் தலைசாய,
உன் தலையை கோதி விட
என்று என்னுள் எத்தனையோ
ஆயிரம் ஆசைகள்...
அத்தனைக்கும் காரணம்
உன்னில் நான் வைத்திருக்கும்
பிரேமம் தானடி....
உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எ......ண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிரஎன் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லைபெண்ணே பெண்ணே
எப்போது சொல்லிக்கொள்வாய்?
என்னை நீ காதலிப்பதாய்!!!!
காத்திருப்பேன் உன் பூவிதழ் வரைந்திடும்
அந்த பொன்மொழிக்காய்
என்றென்றும் காத்திருப்பேன்
காலமெல்லாம் உன் நினைவுடனேயே வாழமுடியும்
காதல் என்று ஒரு வார்த்தை
எனக்குள் நீ விதைத்தால்....!!!!!
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அண......ைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லைஅ
ந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலைஅ
வள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
என் மெளனங்கனள
எல்லாம் புரிந்து கொண்ட உன்னால்
என் மனதை மட்டும் ஏன்
புரிந்து கொள்ள முடியவில்லை.
அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறாயா?
புரியவில்லை எனக்கு..
அன்று
நீ முரண்பட்டு நின்றாய் என் காதல் பிழையென்று....
இன்று அதே நீ முரண்பட்டு
நிற்கின்றாய் உன் தெரிவு பிழையென்று...
இடையில் இடம்பெற்ற முரண்பாடு என்
தெரிவா?? உன் தெரிவா??
நான் பிறந்த பிறப்பின் பயனை
முதன்முதலில் உனைச் சந்தித்த
போதுதான் தெரிந்தது..!
அழகென்பது முகத்தில் இல்லை
அகத்தில்தான் இருக்கிறது என்பதே
உன்னுடன் பழகிய போதுதான் தெரிந்தது..!
பிரிவென்பது கொடும் நோயென்று
எனை விட்டு நீ பிரிந்த போதுதான் தெரிந்தது..!
ஆதலால் அன்பே…
எனை விட்டுச் செல்லாதே…
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!
உன் வரவிற்காய் என் இரு விழிகள்
உன் அன்பிற்காய் என் இதயம்
உனக்காய் நான்,
நீ என் தோழியா, காதலியா?
என்றென்றும் நீ வேண்டும்
அது எதுவாக என்றாலும்..........................
என்னோடு நீயிருந்தால் வானம் கூட என் கைவசம்..............
என்னை விட்டு நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்துடும்..............
உன் பெயரை உச்சரித்தே நிதமும் வாழ்கிறேன் ..............
அன்பே உன் சுவாசத்தில் மட்டுமே நான் வாசம் செய்வேன் ...
நான் உன்னை விட்டு விலகிடுவேனோ என்று நீயும்,
நீ என்னை விட்டு விலகிடுவாயோ என்று நானும்
கவலையுறுவது விடுத்து,
நம்பிக்கை என்னும் உலகத்தில்
நாம் புதிதாய் வாழ்வோம்...
என்னோடு வந்துவிடு கண்மணியே!!!!!
எதை சொல்லுவது
புரிதல் இல்லாததால்
பிரிந்ததையா
பிரிந்த பின் வருந்துவதையா
என் பிரிவு உனக்கு
சந்தோசம் என்றால்
பிரிந்தே இருப்பேன்
உன்னை நினைத்து
தனித்தே இருப்பேன்...
சந்தேகத்தை கொண்டு
என்ன சரித்திரம் எழுத போகிறாய்
உன்னை நேசித்த
என் மனதை நீ சந்தேகிக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆயிரம் தேள்கள்
கொட்டும் வேதனை
சந்தேகத்தை விட்டு
உன்னையே சுவாசிக்கும்
என்னை நேசி..
வார்த்தையின் வலியகரங்கள்
கொண்டு அடித்து விட்டாய்..
என் மனதில்..
ரணமாகி குருதியில்
நனைகிறது என் இருதயம்...
இன்பம் பெற்றாயோ
என்னை வருத்திவிட்டு..
நீ இன்பமாய் இருப்பாய் என்றால்
வருத்திக் கொண்டே இரு.
கலங்கமாட்டேன்..
என் காதலால் உனக்கு
காதலை புரியவைப்பேன்...
உள்ளம் கையில்
உன் பெயரை எழுது
உற்றுப் பார்த்தேன்
உள்ளுக்குள் இருந்த
என் இதயத்தை
சற்றுக் கேட்டேன்
என் பெயரில்
எத்தனை எழுத்துக்கள்
என்பதை மற்ந்தேன்
உன் பெயரை
என்னை மறந்து
உச்சரித்தேன்
உன் உருவை
புகைப் படத்தில்
பார்க்கிறேன்
உள்ளத்தில் தோன்றும்
உன் நினைவுகளின்
இன்பத்தில் வாழ்கிறேன்...
உனைக் கண்ட அந்நாளில்
ஏதோ ஒன்று என்னிடமிருந்து
பிரிந்து தொலைந்து போனது!
கண் தொலைந்த குருடன் போல்
தடவித் தடவி தேடியதுதான் மிச்சம்!
தொலைந்தது எதுவென்று கூட
அறிய மாட்டாமல் போனது!
பின்னொரு நாளில்
மயங்கும் மாலைப் பொழுதினில்
எதிரெதிரே புல் தடவி
நாம் அமர்ந்திருக்க
மெளனத்தின் மத்தியில்
மெல்ல மெல்ல முட்டி முட்டி
அது முளைத்தது!
அருகில் சென்று விசாரித்ததில்
“காதல்” என்று
தன் நாமம் பகன்றது!
மெல்ல விலகி மெளனமாய்
உனை ரசிக்க
“வா! ஒரு கிசுகிசு
சொல்கிறேன்” சட்டையை இழுத்து
காதோடு காதாக
அன்று ஒன்று தொலைந்ததே?
அது உன்னிடமிருந்து மட்டுமல்ல
அவளிடமிருந்தும் களவாடப் பட்டது!
அதுவே உரமாகி இன்று காதலாக
என் உரு பெற்று நிற்கிறது!
நன்றாக பேசுகிறாய் காதலே!
காதலுக்கு பட்டம் தந்து
திரும்பி அமர்ந்த கணம்
இருட்டில் நம்மையும்
நம் மெளனத்தையும் தனிமையில் விட்டு
கத்தி பேச ஆரம்பித்தன
உன்னில் என்னதும்
என்னில் உன்னதும் என
தொலைந்து இக்கணம்
கண்டு கொள்ளப் பட்ட
நம் இதயங்கள்!
கடவுளைத் திட்டி எழுதியபோதுஎன்னிடம் கேட்கப்பட்டது
- ‘நீ நாத்திகவாதியா?’
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு
– ‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும்
– ‘நீ தலித்தா?’
காதல் கவிதையெழுதும்போதெல்லாம்
– ‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?
பாதையெங்கும் பார்வைகளை
விரித்து வைத்துக் காத்திருக்கின்றன
என் கண்கள்.
என் கண்கள் மட்டுமா?
உன் வருகைக்காக ஒவ்வொரு வீட்டு வாசலும்
கோலங்களின் மூலம் தங்களை
அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன
குழந்தையாய் நீயிருக்கும்
கருப்புவெள்ளைப் படத்தை
பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல
பார்த்துப் பார்த்துப் பரவசப் படுவதும்…”அழகி” என்று சொல்லி சொல்லியே
அழகி, உன்னைப் பேரழகியாக்கிட
நான் செய்யும் முயற்சிகளும்…
நீ சும்மா சொல்லும்
“பேச மாட்டேன் போ” க்களுக்கெல்லாம்
ஒரு குழந்தையைப் போல
உன்னிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடுவதும்…
“ம்ம்ம். நல்லா இருக்கு!”
நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக
மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி
நான் கவிதைகள் பொறுக்குவதும்…
உன் மௌன விரதநாட்களிலும் கூட
தொலைபேசியில் உன்னையழைத்து
நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்…
நம் முதுமையில் வாசித்து மகிழ
இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்
நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்…
…எல்லாமே இவர்களுக்குப்
பைத்தியக்காரத்தனமாய்த் தெரிகிறதாம்!
இருந்து விட்டுப் போகட்டும்…
பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?
உன்னை மறந்து விடு என்றார்கள்
நானோ.. மறுத்தேன்…
மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்கள்
நானும் மறக்க வேண்டும் என்று தான்
நினைத்துக் கொண்டேன் ….
இன்று வரை
உன்னை மறக்க வேண்டும் என்பதற்காகவே
நினைத்துக்கொண்டிருக்கின்றேன் !!!!
காதல் விளையாட்டு
உனக்கும் எனக்குமா..?
இல்லை...
இன்னும் புரியவில்லை
எனக்கு....
என்றோ ஓர் நாள்
காணாமல் போகும்
என் இதயம்...
அப்போ
சொல்வாயா - நீ
காதலித்ததை...
சோகங்களையும்
சுகமாக சுமக்கிறேன்
நீ விட்ட
மூச்சுக் காற்றுக்காக...
அப்போது தான்
என் மூச்சு வாழும்
சில காலம்...
என் இதயம் இயங்கிக்
கொண்டிருப்பது
நீ போடும்
பிச்சையடி...
பிச்சையை நிறுத்தி விடாதே
நின்று விடும் - என்
சுவாசம்...
எல்லோருக்கும்
சாவு ஒரு நாள் தான்
ஆனால்
எனக்கு மட்டும்
ஒவ்வொரு நாளும்...
நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
நான்
தொட்டுக்கொள்ளும் - உன்
பாதங்கள் நடந்த
மண்களால் பூசிக்கின்றேன்
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...
பெண்ணே…உனைக்கண்ட நாள்
முதல்பித்துப்பிடித்த பித்தனானேன்
உன் தரிசனத்துக்காய்தவம் கிடந்தேன்
உன் பார்வைக்காய் வேள்வி கொண்டேன்
உன் காதலுக்காய்யாகம் செய்தேன்..
அத்தனையும் வீணாக்குவது போல் இன்று
உனக்கு திருமண நாள் ஏன் என் அருமை புரிய வில்லை
உனக்கு உன்னை நான் காதலித்தது
உன் ஆஸ்த்திக்காக அல்ல
உன் அந்தஸ்துக்காகவும் அல்ல
உன் அழகுக்காகவுமல்ல
உன் குழந்தை போன்ற குணத்துக்காக மட்டும்தான் ஆனால்…..
நீ நிரூபித்திருக்கிறாய்ராடசத மனமுள்ளவள் என்று
நீ நீடூழி வாழவாழ்த்துகிறேன்
சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன்
உன்னுடன்
போன் பண்ணி
கதைக்கும் போது
உள்ளத்தின்
கனம் குறைந்து
இதயம் இலேசாகும்
சந்தோசப்படுவேன்
உன்னைப் பிரியப்போகிறேன்
என்ற எண்ணத்தைக்கண்டு
இதயத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது
கனவுகளை நச்சரித்துக்கொண்டு
நினைவுகளை சுமந்துகொண்டு
இனி
நான் கஷ்டப்படும் போது
இங்கு நீ இல்லை
ஆறுதல் சொல்ல எனக்கு
எனது நினைவுகளுக்கு
நீந்தத்தெரியுமானால்
எப்பொழுதும்
உன் வாசல் வரும்
அன்புள்ள நட்புக்களை
சேர்த்துக்கொண்டு
சந்தோசம் வரும் போது
உனக்குள்ளே
புன்னகைத்துக்கொள்
சோகம் வரும் போது மட்டும்
போன் பண்ணிவிடு எனக்கு
ஆறுதல் மொழிகள்
ஆயிரம் ஆயிரம்
என்னிடம் இப்பொழுது
எல்லாம் உன்னிடம்
கற்றுக்கொண்டது தான்
உன் திருமுகம்
என் கண்களில்
அழகிய புகைப்படமாய்
உன் புன்னகை
என் நெஞ்சினில்
ஓர் இணையத்தளமாய்....
நித்தம் மௌனம் கலைத்து
சத்தம் போட்ட பூக்கள்
மரணித்துவிட்டதென எண்ணும்
விழிகளில் காதல தீ மூட்டிய
பூவே...........
உன்னால் உதிர்ந்த சருகுகளாலான
என்மனதை சாம்பலாக்கவாவது
உதிர்த்துவிடு
உன் புன்னகையால் ஒரு வார்த்தை
கற்பனை உலகை எட்டும் போது
கவிதை வரவில்லை
கண்கள் உனைக் கண்டபோது
வரிகள் வந்தது கவிதை
வடிவம் பெற்றது
உன் வார்த்தைச் சிதறல்கள்
என் இதயத்தில் பதிந்த
கவிச் சுவடுகள்..
உன் கண் சிமிட்டும் சந்தத்தில்
என் மனம் திண்டாடியது
காதல் பந்தத்தில் அன்றுதான்
நான் தடுமாறிய முதல் தினம்
தூரிகை உதடுகளால் வரைந்த
உன் புன்னகை ஓவியங்கள்
இப்போதும்
என் நெஞ்சினில்
நீ ஒரு
மொனாலிசாவாக....
உன்னோடிருந்த நிமிடங்களை
கடிகாரம்
திரும்பத் திரும்பக் காட்டுகையில்
மறக்க முடியவில்லை
உன்னையும் நீ விட்டுச் சென்ற
என் காதலையும் ....
நீ விளையாடிய
என் முதல் காதல்
உன் நினைவுகளைச்
சேர்த்துக்கொண்டு
மறு ஒளிபரப்பாகுது
இன்னும் என் மனசில்
மெகா சீரியலாக.....
காதல் வானில்
நிலவு - உன்னை
முத்தமிட்ட மேகம்
நான்....
மரணத்தின் பின் துடிக்கும்
மனங்கள் போல
உன் ஞாபகத்தில்
சோகத்தின் தாரமாய்
குடித்தனம் நடத்தும்
இவன்
இன்னும் நீ வருவாய் என
காத்திருக்கிறேன் தனியே....
கவிதைக்கு அர்த்தம் சொல்ல வந்து
என் மேல் நீ விதைத்த
நாற்று
இதயத்தில் வீசும் காற்று
நாற்று
கிளைத்து வளர்வதற்கிடையில்
சிதைக்கப்பட்டு விட்டது
சிதைந்த துண்டுகளுடன்
இதயமும் துளிர் விடுமென
நானும்
மலர்க்கொத்துக்களாய்
உன் நினைவுகள்
மனதில்
இன்னும் நீ வருவாய் என....
மீண்டும் நீ சொன்னதை நினைவு படுத்துகிறேன்
உனக்கு உண்மையாய் பட்ட வார்த்தைகள் மட்டும்...
என்னை ஏன் பாதித்தது?
எதையுமே ஒளித்துவைக்காமல்...
சட்டென்று நீ கூறிய வார்த்தைகள்
என்னை ஓரிரு நிமிடங்கள் அறைந்தது தெரியுமா?
வேண்டாம்!
தெரிந்திருந்தால் நீயே உன்னை நொந்து கொள்வாய்...
ஏதேதோ கஷ்டங்களால் உடைந்து போன
உந்தன் மனது...
அதனால் வந்த வெள்ளை மனது...
உனக்கே தெரியாமல் என்னை சிறிதாய் கீறினாலும்...
நீ மாறாமல் இரு
ஏனெனில் உன்னை நட்பாக ஏற்றதே
உன் தூய்மையான மனம் கண்டு!
உண்மை வலித்தாலும்...
உடனே ஏற்றுக்கொள்வேன்
உண்மை காதலை புரிந்து கொள்ளாத
ஊமை காதலி நீ
உறவுகள் உறுத்தியும் உதித்திடதா
உள்ளமோ உனது
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்
முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்
ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்
பக்கத்தில் இருந்தும்
பார்க்காமல் இருக்கிறாய்
கேட்கத் தெரிந்தும்
கேட்காமல் இருக்கிறாய்
பேசத் தெரிந்தும்
பேசாமல் இருக்கிறாய்
என் நிலை தெரிந்தும்
தெரியாததுபோல் இருக்கிறாய்
என் மனம் அறிந்தும்
மௌனமாய் இருக்கிறாய்
என் இந்த உள்ளக் குமுறல் தெரிந்தும்
தெரியாதது போல் இருக்க உன்னால் முடியும் !
அதற்காய் நானும் இறப்பேன் ஒரு நாள் ...
என்னை நீ அறிய, முழுவதுமாக ...
மௌனம் ஒன்றே கொண்டு
அழும் என் நிலை, ஏனோ மாற்றார் அறியார்
நீயுமா?
ஊமையின் குமுறலும் சத்தமாய்
அவர்களுக்கு கேட்க,
அழுகிறேன் என் மௌனத்தோடு யாரும் அறியாமல்.
வருவாய் ஒரு நாள் என் அருகில்
என்ற நம்பிக்கையோடு
வழி(லி) மேல் விழி வைத்து...
கனவுப் பாதையென்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தான்
அழிவுப்பாதையென்று
அப்புறமாய்த்தான் கண்டு கொண்டான்
கவிதைப் பாதையென்பதும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்
எல்லாப்பதையும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்
எந்தப் பாதையாய்
இருந்தால் என்ன
ஏதோ ஓர்
அழிவுப் பாதை
நீண்ட
நெடும்பாதை
நடக்க நடக்க மாயமாய்
நீளும் பாதை
எப்பொழுது
வந்து சேரும் அத்தம்
இப்பொழுது
இருப்பது எந்த இடம்.
என் கனவே நீ என்பதால் தான் கலைந்து போகும்
உறக்கத்தை விரும்புவதில்லை நான்
உன் விழிகளுக்கு இமையாக மட்டுமல்ல
உன் உறக்கத்தில் உன்னைக் காக்கும் விழியுமாவேன் நான்
உனக்கான கவிதை என்றுதெரிந்தும்
எனக்கா என நீ கேக்கும் அழகுக்காகவே
எத்தனை கவிதையும் எழுதலாம் நான்
" ஏன் துடிக்கிறாய்? " என்று
இதயத்தை யாரும் காரணம் கேட்பதில்லை
நீயும் கேட்காதே என்னிடம்
" ஏன் என்னை காதலிக்கிறாய் ? " என்று
சொல்ல தெரியாது எனக்கு,
காதலிக்க மட்டும்தான் தெரியும் ......
ஒழிந்து திரியும் காதலை தேடித்தான் திரிந்தேன்
யார் யாரோ முகத்தில்_ அது உன் இதயத்தில்
மறைந்திருந்ததை நீ காட்டிக் கொடுக்கும் வரை
என்னை ஞாபகப்படுத்தும்
எந்தபொருளையாவது
காண நேர்ந்தால் தயவுசெய்து அ
னாதையாய் விட்டுவிடாதே
ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில்
போட்டுவிடு கோடி புண்ணியம் கிடைக்கும்
வாழ்க்கை ஒரு போர்க்களம்
புரிந்து கொண்டேன் காதலி
என்றஆயுதத்தை தொலைத்தபின்
எல்லாரும் இருந்தும்
யாருமில்லாத பூமியில்
வாழ்வதைவிட
யாருமே இல்லாத
வானத்தில் நிலாவே
உன்னோடு மட்டும்
வாழவிரும்புகிறது
என் காதல் மனசு
உண்மை காதலை புரிந்து கொள்ளாத
ஊமை காதலி நீ
உறவுகள் உறுத்தியும் உதித்திடதா
உள்ளமோ உனது
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து தினம்
தோற்று போவதற்கு பதில்
முத்துக்களால் உனக்கு
மாலையிட கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்
ஒரே நாளிலே
என் காதலை
நிருபித்திருக்கலாம்
உன் காதலுக்குதான் கண் இல்லை
நீ இல்லாமல் என் கவிதைகள்
அழுகின்றனவே அதாவது கேக்கிறதா
கண்ணீரில் உன்னைத்தேடி சருகாய்த்தான் போனேன் இன்று உன்னைநான் கண்டநேரம் என்னை நான் இழந்தேன் இங்கு நெஞ்செங்கும் உந்தன் நினைவே போகாதே எந்தன் உயிரே வாழத்தான் தோன்றாதிங்கே பார்ப்பேனோ இனிமேல் உன்னை தொலைத்தேனே உன்னில் என்னை வருவாயோ பெண்னே நீயும் தருவாயோ மீண்டும் என்னை
நீ இல்லாத இவ்வுலகில் வாழ எனக்கு வி௫ப்பமில்லை இ௫ந்தும் உன் நினைகளைப் பிரிந்து சாகவும் முடியவில்லை இந்த உலகத்திலி௫ந்தே அன்னியப்படுத்தப்பட்டதாய் உணர வைக்கிறாயடி கண்ணே
தொலைந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறேன். நிலை தடுமாற வைக்கிறாய். வயதும் வாழ்வும் வளர்ந்ததே தவிர, மனமும் தவிப்பும் அடம் பிடித்தபடி அதே இடத்தில் சின்னக் குழந்தையாய்...