மீண்டும் நீ சொன்னதை நினைவு படுத்துகிறேன்
உனக்கு உண்மையாய் பட்ட வார்த்தைகள் மட்டும்...
என்னை ஏன் பாதித்தது?
எதையுமே ஒளித்துவைக்காமல்...
சட்டென்று நீ கூறிய வார்த்தைகள்
என்னை ஓரிரு நிமிடங்கள் அறைந்தது தெரியுமா?
வேண்டாம்!
தெரிந்திருந்தால் நீயே உன்னை நொந்து கொள்வாய்...
ஏதேதோ கஷ்டங்களால் உடைந்து போன
உந்தன் மனது...
அதனால் வந்த வெள்ளை மனது...
உனக்கே தெரியாமல் என்னை சிறிதாய் கீறினாலும்...
நீ மாறாமல் இரு
ஏனெனில் உன்னை நட்பாக ஏற்றதே
உன் தூய்மையான மனம் கண்டு!
உண்மை வலித்தாலும்...
உடனே ஏற்றுக்கொள்வேன்
No comments:
Post a Comment