என் கண்களில் நீரில்லை
எழும்பி கீழே வருமுன்னர்
இதயதாபத்தால் தீயாக
எரிக்கப்படது ஆவியாக
என் நாவில் சொல்லில்லை
சொல்லிவிட எண்ணுமுன்னர்
நெஞ்சுத் தணல் நெருப்பாக
நீக்கிவிட்டது மௌனமாக
என் காலில் இயக்கமில்லை
எழுந்து நடக்க முயலுமுன்னர்
உள்ளத்து உஷ்ணம் உருக்கிவிட
ஊனமுற்றது உண்மையாக
என் இதழில் சிரிப்பில்லை
மெள்ள விரிந்து மலருமுன்னர்
எண்ண சோகம் இயல்பாய் வாட்ட
மங்கி மறைந்தது மந்தமாக
என் நெஞ்சில் நினைவில்லை
எங்கும் நீயே நிறைந்திருக்க
எண்ணமாய் எழும்பி விரியுமுன்னர்
இதயம் நிறைந்தது நீயாக!!!
No comments:
Post a Comment