Monday, February 22, 2010

என்னை நேசி..

எதை சொல்லுவது
புரிதல் இல்லாததால்
பிரிந்ததையா
பிரிந்த பின் வருந்துவதையா
என் பிரிவு உனக்கு
சந்தோசம் என்றால்
பிரிந்தே இருப்பேன்
உன்னை நினைத்து
தனித்தே இருப்பேன்...
சந்தேகத்தை கொண்டு
என்ன சரித்திரம் எழுத போகிறாய்
உன்னை நேசித்த
என் மனதை நீ சந்தேகிக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆயிரம் தேள்கள்
கொட்டும் வேதனை
சந்தேகத்தை விட்டு
உன்னையே சுவாசிக்கும்
என்னை நேசி..

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?