Monday, February 22, 2010

தவிக்கின்றேன் நான்.......

பெண்னே எனக்கும்
காதலிக்கதெரியும் -அதுவும்
அன்பாய் காதலிக்கதெரியும் ........

உன்னை காதலிக்கவும் -என்
அசைவுக்கு ஆடவைக்கவும் -எனக்கு
தெரியும்......

உன் கண்ணீரில் -எனக்கு
காதல்கவிதை எழுதி துதூ விட -உன்னை
என்னால் பணிக்கவும் முடியும்......

எனக்காக நீ -இரவெல்லாம் -விழி
மூடாமல் காத்திருக்கவும் -என்னால்
ஏவ முடியும் .........

உன் வாயால் நீ எனக்கு -அடிமை
என்று ஒப்புதலும் -என்னால்
வாங்க முடியும்...............

ஆனால் நீ யார்? எங்கே
இருக்கின்றாய் என்று மட்டும்
தெரியாமல் தவிக்கின்றேன் நான்................

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?