Thursday, April 1, 2010

மறக்கத் தெரியவில்லை எனது காதலை.....

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
சிறகுகள் முளைகும் முன்னே
சிறகினை பூட்டிக் கொண்டேன் என் தேவியே
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...

காதல் மலர்ச்செண்டு நான் கொண்டு வந்தேன்
உன்னை சேராமல் உயிர் வாடி நின்றேன்
உனக்காக பாட இசை கொண்டு வந்தேன்
மெ...ளனங்கள் பரிசாகத் தந்தேன் ..

செந்தம் ஆகாது சொல்லாத நேசம்
இதயம் சேராது இல்லாத பாசம்...காதல் மகராணியே..
மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...

உன்னை நினையாமல் ஒரு நாளும் இல்லை
உன்னை மறந்தாலே உயிர் சொந்தம் இல்லை...
கடல் நீலம் கூட கரைந்தோடி போகும்
என் அன்பில் மாற்றம் இல்லை..
தோகம் தீயோடு வாடும் போதும்
தாகம் என் தாகம் தீர்வதில்லை
ஆசை அழியாதடி

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை...
சிறகுகள் முளைகும் முன்னே
சிறகினை பூட்டிக் கொண்டேன் என் தேவியே

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?